அதிமுக பெரியாரை ஏத்துக்கலையா! சீமான் விஷயத்தில் மௌனம் ஏன்? - செல்வப்பெருந்தகை கேள்வி
சென்னை: தந்தை பெரியார் குறித்து சீமான் பேசியிருந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவுக்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை, “அதிமுக பெரியாரை ஏற்றுக் கொள்ளவில்லையா. இந்த விவகாரத்தில் அதிமுக Soft-ஆக இருப்பது ஏன்? இந்த விஷயத்தை ஏன் கண்டிக்கவில்லை? புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சியை ஆரம்பிக்கும் போது தந்தை பெரியார் தங்களுடைய தலைவர் என்று ஏற்றுக் கொண்டவர். அண்ணா திமுக என்று கட்சியின் பெயரை வைத்திருக்கிறார்கள் அண்ணாவுடைய குருவே பெரியார் தான்.

அப்படி இருக்கும்போது பெரியாரை விமர்சிக்கும் போது அதிமுக என் அமைதி காக்கிறது? நாங்க எல்லாம் கூட கண்டித்திருக்கிறோம். பாஜக இதை கண்டிக்காது ஏனெனில் பாஜகவினுடைய செயல் திட்டங்களை சீமான் நடைமுறைப்படுத்துகிறார். சீமான் பாஜகவில் ஊதுகோலாக இருக்கிறார் அவர்களால் பேச முடியாததை சீமானை வைத்து பேச வைக்கிறார்கள். அதற்காக அதிமுக ஏன் மௌனமாக இருக்க வேண்டும்? ஃப்ரீயா இருந்த தேசத்தின் சொத்து.
இந்த விஷயத்தை அதிமுகவும் பாஜகவும் புறக்கணித்திருப்பது இரண்டு கட்சிகளின் எதிர்கால சட்டமன்ற தேர்தல் திட்டமா என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு கட்சிக்கும் முடிவு எடுக்கும் அதிகாரம் இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
பிரச்சனை என்ன?:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கட்சியை தொடங்கிய காலத்தில் தன்னுடைய முப்பாட்டன் பெரியார் என்று கூறியிருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, பெரியார் குறித்த விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்தார். இதன் உச்சமாக சமீபத்தில் பெரியார் குறித்து அவர் பேசியிருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. சமூக மாற்றத்திற்கு பெரியார் என்ன செய்தார்? என்று கேள்வி எழுப்பிய அவர், பெரியார் கூறியதாக மேலும் சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
போராட்டம்:
பெரியார் குறித்த சீமானின் கருத்துகளுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து பெரியார் இயக்கங்கள் சீமானுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியிருந்தன. ஆனால் அதிமுக இந்த விவகாரத்தில் போதுமான அளவுக்கு எதிர்ப்பை தெரிவிக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் விமர்சித்திருந்தன. அதன் தொடர்ச்சியாக செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications