தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு
சென்னை: விஜய் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக வெற்றி கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் நாள் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் தீயாய் வேலை செய்து வருகிறார்கள். தொகுதி பங்கீட்டை திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி முடித்துள்ள நிலையில் வேட்பாளர்களை உறுதி செய்யவும், பிரச்சாரத்தையும் தீவிரப்படுத்தவும் தொடங்கியுள்ளன. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த சீமான் பிரசாரத்தை தொடங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இதேபோன்று விசிக, காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தும் யாரும் வராததால் தனித்து விடப்பட்டிருக்கும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறது. கிட்டத்தட்ட வேட்பாளர்களை உறுதி செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதில் கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் விஜய் தமிழகம் முழுக்க சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்வார் என்று தவெக நிர்வாகிகள் கூறி வந்த நிலையில் இன்னமும் விஜய் பிரசாரத்தை தொடங்கவில்லை என விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் விஜய் வரும் 28 ஆம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தான் போட்டியிட உள்ள பெரம்பூரில் இருந்து பிரசாரத்தை விஜய் தொடங்க இருக்கிறாராம்.
இந்த நிலையில் தான், விஜய் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக வெற்றி கழக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் உள்துறை செயலாளர் தீரஜ் குமாரை சந்தித்து மனு அளித்துள்ளார். அதில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்திற்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையனிடம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து என்ன கோரிக்கை வைத்தீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த செங்கோட்டையன், "விஜய்யின் பிரச்சாரத்திற்காக சந்தித்தோம்.. தேர்தலை பொறுத்தவரைக்கும் என்ன மாதிரியான ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் இருக்கு. என்ன மாதிரியாக விதிகள் பின்பற்றப்படுகிறது என்பது குறித்து கேட்டோம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications