செந்தில் பாலாஜி கேட்ட சான்ஸ்.. விடுவிக்கப்படுவாரா? வாதாட அனுமதிக்கப்படுவாரா? இன்று கோர்ட் உத்தரவு?
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதானார். இதன்பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

பின்னர், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
வழக்கு விசாரணை: இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 67 கோடியே 40 லட்சம் ரூபாய் செந்தில் பாலாஜியிடம் இருந்ததாக சொல்கிறார்கள், ஆனால் அது நிரூபிக்கப்படவில்லை. எனவே செந்தில் பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது,
இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் வாதிடும்போது, "கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்குப்பதியப்பட்டுள்ளது. வங்கி கணக்கிலும் நிறைய பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, வீடு, அலுவலகங்களில் 30 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது.. இந்த வழக்கு விசாரணையை முடக்கும் நோக்கில் தொடர்ச்சியாக மனுத்தாக்கல் செய்து வருகிறார். போதிய ஆதாரங்கள் உள்ளதால் செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று வாதிடப்பட்டது.
எதிர்பார்ப்பு: இதையடுத்து, கடந்த மார்ச் 28ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார். ஆனால், அதே நாளில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனுவில், மறுபடியும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் என செந்தில் பாலாஜி, இன்னொரு புதிய மனுவை தாக்கல் செய்தார்.
அவரது மனுவில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், அமலாக்கத் துறை வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீது மறுபடியும் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்... அப்படி வாதிட அனுமதிக்கவில்லையானால், தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என்று கோரியிருந்தார்.
புதிய மனு : இந்த மனுவை விசாரித்த சென்னை அமர்வு நீதிமன்றம் அமலக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.. செந்தில் பாலாஜியின் மனு மீது இன்று 17ம் தேதி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க உள்ளது. இது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மீண்டும் நீட்டிக்கப்பட்ட நிலையில், இன்றுடன் காவல் நிறைவடைகிறது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications