செந்தில் பாலாஜி வெளிநாட்டுக்கு பறந்துடுவாரா? 3ஆவது நீதிபதியை நியமித்ததே தவறு.. முகுல் ரோத்தகி வாதம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு நாளில் சிறிது நேரம் விசாரிக்கலாம் என அவர் தரப்பில் ஆஜரான முகுல் ரோத்தகி வாதத்தை முன் வைத்தனர்.
அமைச்சர்செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த கைதை எதிர்த்து அவருடைய மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.
செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதமானது என மேகலா தாக்கல் செய்த வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து இந்த வழக்கிற்கு 3ஆவது நீதிபதி அமர்வு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் 3ஆவது நீதிபதி, செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என தீர்ப்பளித்தார். இதையடுத்து மேகலா இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தொடர்ந்தார். அந்த மனு மீது கடந்த ஜூலை மாதம் 26, 27 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்தப்பட்டது.
நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு நடந்த விசாரணையில் தங்கள் தரப்பு மேலும் வாதம் செய்ய வேண்டியுள்ளது என்பதால் இந்த வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்குமாறு செந்தில் பாலாஜி வழக்கறிஞர் கபில் சிபல் கோரிக்கை விடுத்தார். அதன்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் இன்றைய தினம் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை தொடங்கியது.
ஏற்கெனவே கபில் சிபல் வாதம் முடிவடைந்த நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதத்தை முன் வைத்து வருகிறார். அவர் வாதத்தில் கூறியிருப்பதாவது: 5 நாட்களுக்கு மேல் அமலாக்கத் துறைக்கு போலீஸ் காவல் கோர உரிமை இல்லை. செந்தில் பாலாஜியின் உடல் நிலை தற்போது தேறி வருவதால் அவரிடம் ஒரு நாளில் சிறிது நேரம் விசாரிக்கலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவில் கைது செய்து மறுநாள் காவல் கோருகிறார்கள். செந்தில் பாலாஜி வெளிநாட்டுக்கு பறந்து செல்லக் கூடியவர் அல்ல. செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை. டிவிஷன் பெஞ்ச் தீர்ப்புக்கு பிறகு மூன்றாவது நீதிபதி நியமித்தது தவறு. வேண்டுமானால் பெரிய அமர்வை அமைத்திருக்கலாம். சட்டத்தை மாற்றி அமைக்க நீதிமன்றத்தில் அதிகாரமில்லை என முகுல் ரோத்தகி வாதத்தை முன் வைத்தார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications