19ம் தேதி ஜாமீன் விசாரணை வேண்டாமே.. செந்தில் பாலாஜி கோரிக்கையை ஏற்றது உயர்நீதிமன்றம்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான விசாரனை வரும் 19 ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் 21 ஆம் தேதி விசாரணை நடைபெற உள்ளது. ஏனெனில், மனு மீதான விசாரணையை 21 ஆம் தேதி நடத்த செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் முறையீடு செய்த நிலையில், முறையீட்டை ஏற்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி செய்தனர். அப்போது செந்தில் பாலாஜிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு அமலாகக்த்துறை செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தது.

அதன்பிறகு நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமனறக் காவல் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்து வருகிறார். உடல் நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி கோரிய ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்த நிலையில், தற்போது வழக்கமான ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு முதன்மை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று முன் தினம் சென்ன உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், "சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டம் 45-வது பிரிவின்படி, குற்றம் புரிந்திருக்கவில்லை என நீதிமன்றம் திருப்தியடையும் வகையில் நிரூபிக்க வேண்டும். செந்தில் பாலாஜிக்கு எதிராக பதியப்பட்ட வழக்கில் நியாயமான சந்தேகம் உள்ளது.
டிஜிட்டல் ஆதாரங்கள் திருத்தப்பட்டுள்ளது தடயவியல் ஆய்வில் தெரியவந்துள்ளது திருத்தப்பட்ட ஆதாரங்களை நீக்கி விட்டால் செந்தில் பாலாஜிக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் விடுதலை செய்யப்பட வேண்டும்" என வாதிட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்தூறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இந்த நிலையில் தான், செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications