கூட்டணியுடன் வரும் திராவிட கட்சிகள்! தனித்து களமிறக்கும் 5 முக்கிய கட்சிகள்-பரபரக்கும் தேர்தல் களம்
சென்னை: தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 2017ஆம் ஆண்டிலேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இருப்பினும், பல ஆண்டுகளாக அவை நடத்தப்படவில்லை. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தலையிட்ட பின்னர், கடந்த 2019இல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் மட்டும் நடைபெற்றது. அதிலும் கூட புதிய மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்தச் சூழலில் திமுக ஆட்சி அமைத்த உடனேயே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக அது சற்றே தாமதமானது.

உள்ளாட்சி தேர்தல்
அதைத் தொடர்ந்து கடந்த அக். மாதம் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெற்றது. 6 மாதங்களுக்கு முன்பு ஆளும் கட்சியாக இருந்த அதிமுக படுதோல்வியடைந்தது. இதனால் அதே சூட்டோடு இந்தாண்டு பட்ஜெட்டிற்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த விரும்பியது ஆளும் தரப்பு. இருப்பினும், கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் தேர்தல் தள்ளிப்போனது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்தச் சூழலில் தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி, ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. மேலும், வரும் மார்ச் 4இல் மேயர், நகர்மன்ற தலைவர்களைத் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

7 முனை போட்டி
தமிழ்நாடு முழுக்க தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அனைத்து தேர்தல் கட்சிகளும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. தமிழ்நாட்டில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பல முனை போட்டி ஏற்பட்டுள்ளது. கடந்த சட்டசபைத் தேர்தலில் 5 முனை போட்டி, நிலவிய நிலையில் இந்த முறை அது 7 முனை போட்டியாக மாறியுள்ளது.

அப்படியே இருக்கும் திமுக கூட்டணி
திமுக கூட்டணியைப் பொறுத்தவரைக் கடந்த சட்டசபைத் தேர்தலில் இருந்த அதே கூட்டணியுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்கிறது. கடந்த அக். மாதம் நடைபெற்ற 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் இந்த கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்திருந்த நிலையில், இப்போது மீண்டும் அதையே நிகழ்த்த தயாராகி வருகிறது திமுக கூட்டணி. கடந்த முறையைப் போலவே மாவட்டச் செயலாளர்கள் தான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக பாஜக கூட்டணி என்னவாகும்
மறுபுறம் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்து இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்கிறது. பொங்கல் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றில் ஆளும் தரப்பினர் மீது இருக்கும் மக்கள் கோபத்தை வாக்குகளாக மாற்ற வியூகம் வகுத்து வருகிறது அதிமுக! கடந்த சில அதிமுக - பாஜக உறவில் சலசலப்பு ஏற்பட்டுள்ள போதிலும் இந்தக் கூட்டணி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டணியில் இருந்து விலகிய கட்சிகள்
சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 இடங்களில் போட்டியிட்ட பாமக, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலேயே தனித்துத் தான் போட்டியிட்டது. அதேபோல இந்த முறையும் பாமக தனித்துப் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதேபோல சட்டசபைத் தேர்தலை அமமுக உடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் என்று கடந்த ஆண்டு நவ. மாதமே அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தார்.

சாதிப்பரா கமல்
அதேபோல மக்கள் நீதி மய்யமும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே களமிறங்குகிறது. மற்ற கட்சிகளைவிட முன்கூட்டியே பல இடங்களில் வேட்பாளர்களை அறிவித்து, சத்தமில்லாமல் பிரசாரத்தையும் தொடங்கிவிட்டது மநீம. கடந்த தேர்தல்களிலும் நகர்ப்புறங்களில் மக்கள் நீதி மய்யத்திற்கு வாக்குகள் அதிகமாகவே வந்தது. எனவே, அதைக் கணக்கிட்டே, இந்த முறை நகர்ப்புறங்களில் அதிக கவனம் செலுத்தி பரப்புரை செய்து வருகிறது மக்கள் நீதி மய்யம். தற்போது "விக்ரம்" ஷூட்டிங்கில் இருக்கும் கமல், விரைவில் தீவிர பிரசாரத்தில் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர்
சீமானின் நாம் தமிழர் கட்சியும் வழக்கம் போல இந்த முறையும் தனித்தே களமிறங்குகிறது. இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்யக் கட்சியின் பொதுச்செயலாளர் சந்திரசேகரன் தலைமையில் பணிக்குழு அமைத்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 7 முனை போட்டியாக மாறியுள்ளது. பல முனை போட்டியாக இருந்தாலும் கூட கடந்த சட்டசபை தேரலைப் போலவே இந்த முறையும் திமுக, அதிமுக இடையே தான் கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications