சென்னையில் மழைநீருடன் கழிவுநீர்! தொற்று நோய் ஏற்படும் அபாயம்! சுகாதாரத்துறை செய்ய வேண்டியது என்ன?
சென்னை: சென்னையில் பல இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்ததால் கிருமித் தொற்று வேகமாக பரவக்கூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் காலில் அரிப்பு, உள்ளிட்ட தோல் சார்ந்த வியாதிகளும் உண்டாகலாம். இதனால் மழைநீர் வடிந்துவிட்டதே என்பதோடு சென்னை மாநகராட்சி நிர்வாகமும் அரசும் விட்டுவிடாமல் தொடர்ச்சியாக சென்னை முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். அதுவும் பெயருக்கு காய்ச்சல், சளி மாத்திரைகளை மட்டும் வைத்துக்கொண்டு நடத்தாமல் தோல் சிகிச்சை நிபுணர்களையும் இந்த முகாம்களில் பங்கேற்க வைக்க வேண்டும்.

ஏனெனில் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், உணவு, பால், தண்ணீருக்காக வெளியே அலைந்து திரிந்தவர்களுக்கும் தண்ணீரில் ஊறி ஊறி காலில் உள்ள தோலில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இதனால் தான் தோல் சிகிச்சை நிபுணர்களும் மருத்துவ முகாம்களில் அவசியம் இடம்பெற வேண்டும் என்பதற்கான காரணமாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே ஃபுளூ காய்ச்சலும், டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருவதால் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகள் நிரம்பி வழிகிறார்கள்.
இதில் மழைக்கால தொற்று நோய்களும் சேர்ந்து கொண்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இதனால் தான் மழை நீர் வடிந்த பகுதிகளில் கிருமி நாசினிகளை தொடர்ந்து தெளிக்க வேண்டும். ஓரிரு நாட்களோடு இதனை நிறுத்திவிடாமல் குறைந்தது 10 நாட்களுக்காவது கிருமி நாசினிகளை தெளித்து மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மழை பெய்த போதும், வெள்ளம் சூழ்ந்த போதும் பேரிடர் மற்றும் மேலாண்மைத் துறை எந்தளவுக்கு சுறுசுறுப்பாக செயல்பட்டதோ அதே போன்று சுறுசுறுப்புடன் சுகாதாரத்துறை இப்போது பம்பரமாக சுழல வேண்டும்.
மழை வெள்ளத்தால் சென்னை மக்கள் பாதிப்புக்குள்ளாகி அவதியுற்று வரும் நிலையில், மேலும் தொற்று நோய் பரவினால் அதை அவர்களால் தாங்கவே முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சென்னையில் ஓரளவு இயல்பு நிலை திரும்பி விட்டதால் மருத்துவ முகாம்களை தாமதமின்றி இப்போதே நடத்த ஆரம்பித்தால் ஓரளவு மழைக்கால தொற்று நோயை கட்டுப்படுத்த முடியும்.
அதேபோல் அரசு மருத்துவமனைகளிலும் தற்காலிகமாக கூடுதல் மருத்துவர்களை பணியமர்த்தி காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கலாம்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications