பத்ம சேஷாத்ரியை அடுத்து.. சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் மீதும் பாலியல் புகார்!
சென்னை: பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை சேத்துபட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலியல் புகார் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை கே கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன். இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாரை அடுத்து அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு பள்ளியிலிருந்து புகார் எழுந்துள்ளது. சென்னை சேத்துப்பட்டில் உள்ள மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் வணிகவியல் துறை ஆசிரியர் ஆனந்த் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது.

மெட்ரிக் பள்ளி
சிபிஎஸ்இ பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆனந்த் தற்போது அதே பள்ளியின் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றி வருகிறார் என கூறப்படுகிறது. இவர் மீதான புகாரை முன்னாள் மாணவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மாணவர்கள்
இதுகுறித்து யாரோ ஒரு மாணவி ஆனந்துக்கு அனுப்பி அவரிடம் இதை கேட்டபோது வாட்ஸ் ஆப்பில் இந்த தகவலை மறுக்கிறார். அவர் தனது சேட்டிங்கில் , "இதை நீங்கள் நம்புகிறீர்களா, உங்கள் அனைவருக்கும் இது குறித்து நன்றாகவே தெரியும். அதிலும் என்னிடம் காமர்ஸ் படித்த மாணவர்களுக்கு என்னை பற்றி நன்றாக தெரியும்.

கடவுளுக்கு தெரியும்
எனது பணியில் அர்ப்பணிப்பு குறித்து கடவுளுக்கு தெரியும் என் அன்பான மகளே!. உங்களுக்கு தெரியும். நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை. நான் கொஞ்சம் ஸ்டிரிக்ட்டாகவே இருப்பேன். எனது மாணவர்களை நான் எப்போதும் பாதுகாப்பேன்.

கேள்வி
இதை யார் செய்தார்கள் என தெரியவில்லை. ஆனால் நிச்சயம் என்னிடம் படித்தவர்களாக இருக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார் ஆனந்த். பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் மீது எடுக்கப்பட்டது போல் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications