சென்னை ஐஐடியில் தலித் மாணவிக்கு கூட்டு பாலியல் கொடுமை... மேற்கு வங்க மாணவர் கைது - 7 பேருக்கு வலை!
சென்னை: சென்னை ஐஐடியில் 2020 ஆம் ஆண்டு பட்டியலின மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவனை சென்னை போலீஸ் கைது செய்து விசாரணைக்கு
அழைத்து வந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் வேதியியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை படித்து வந்துள்ளார்.
அவரை 3 மாணவர்கள் உட்பட 8 பேர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதால் துறை சார்ந்த பேராசிரியர் எடமன பிரசாத்திடம் புகாரளித்துள்ளார்.

சாதிரீதியாக அவமானம்
புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காத பேராசிரியர் பாதிக்கப்பட்ட பட்டியலின மாணவியை சாதி ரீதியாக அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அவர்கள், தங்களை தட்டிக்கேட்க யாருமில்லை என்று அறிந்து தொடர்ந்து 2 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கின்றனர்.

நடவடிக்கை எடுக்காத ஐஐடி நிர்வாகம்
தொடர் பாலியல் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி ஐஐடி புகார் கமிட்டியிடம் கடந்த 2020 ஆம் ஆண்டு தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்து இருக்கிறார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்த ஐஐடி நிர்வாகம், மாணவியின் புகாரில் உண்மை இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்ததாக கூறப்படுகிறது.

3 முறை தற்கொலை முயற்சி
பேராசிரியரிடமும், ஐஐடி புகார் கமிட்டியிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மனம் உடைந்த மாணவி 3 முறை தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்திடமும், மயிலாப்பூர் காவல் நிலையத்திலும் புகார் தெரிவித்து இருக்கிறார் மாணவி. அங்கு சென்றும் மாணவியை கொடுமைபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாதர் சங்கம் புகார்
இறுதியாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்திடம் புகாரளித்திருக்கிறார் மாணவி. இதனை விசாரித்த மாதர் சங்கத்தினர் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மாணவி பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர். 10 மாதங்களுக்கு மேலாக வழக்கு கிடப்பில் போடப்பட்டதாகவும், சம்பந்தப்பட்ட மாணவர்கள், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், மயிலாப்பூர் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி சுசித்ரா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

மேற்கு வங்க மாணவர் கைது
மாதர் சங்கத்தின் குற்றச்சாட்டை அடுத்து இந்த விவகாரம் பூதாகரம் எடுத்தது. இந்த வழக்கை கையில் எடுத்த சென்னை காவல்துறை, குற்றம்சாட்டப்பட்ட மாணவர்களை கைது செய்ய மேற்கு வங்கம் விரைந்தனர். அங்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வந்த 30 வயதான கொல்கத்தாவை மாணவர் கிங்ஸ் தேப்சர்மாவை கைது செய்த தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்து துறைமுகம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications