சென்னையிலும் விழுந்த பொள்ளாச்சி பயங்கரத்தின் நிழல்.. பெண்கள் விடுதியில் பாலியல் தொல்லை!
Recommended Video

சென்னை: சென்னையில் செயல்பட்டு வரும் தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருக்கும் பெண்கள் அதன் உரிமையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையம் எதிரே ஒரு பெண்கள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு ஏராளமான பெண்கள் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இங்குள்ள பெண்களுக்கு அதன் உரிமையாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இது குறித்து மானாமதுரையைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறுகையில் விடுதி உரிமையாளர்களான தாமஸ் மற்றும் ஆறுமுகம் ஆகிய இருவரும் தங்கள் நண்பர்களை விடுதிக்கு அழைத்து அங்கேயே மது அருந்துகின்றனர்.

வீடியோ
பின்னர் மது போதையில் அவர்கள் அனைவரும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் மதுபோதையில் உரிமையாளர்கள் தாமஸும் ஆறுமுகமும் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை வீடியோவாக எடுத்து அந்த ஆதாரத்தை போலீஸிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து தாமஸ், ஆறுமுகத்திடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவி அனுமதி
அதற்கு அந்த பெண் ஒத்துழைக்காததால் அவரை தாக்கியதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார். ஆதம்பாக்கத்தில் இது போல் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண்களின் குளியலறையில் கேமரா வைத்தாக திருச்சியைச் சேர்ந்த சஞ்சய் கைது செய்யப்பட்டார்.

4 பேர் கைது
அதுபோல் பொள்ளாச்சியில் பெண்களை காதல் வலையில் விழ வைத்து நண்பர்களோடு அந்த பெண்களை பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து அவர்களை மிரட்டி வந்ததை அடுத்து புகாரின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி
இந்த சூழலில் இது போன்று சென்னையிலும் நண்பர்களுடன் சேர்ந்து பெண்களை துன்புறுத்தும் சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்துகிறது. ஆதம்பாக்கம் சம்பவத்தை அடுத்து விடுதிகள் முறைப்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications