Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முதல்முறை இப்படி.. தவெக கூட்டத்தில் கவனிச்சீங்களா? விஜய் மேடையில் இருக்கும் போதே.. சுவாரசிய சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இதுவரை தவெக கூட்டங்களில் நடக்காத சுவாரசிய சம்பவம் ஒன்று இன்று நடக்கும் தவெக கூட்டத்தில் நடைபெற்றது.

இன்று மேடைக்கு விஜய் வந்ததும் தொண்டர்கள் விசில் அடித்து வரவேற்றனர். க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

TVK Vijay

இதுவரை கட்சியின் தலைவர் விஜய் மட்டுமே மையப்புள்ளியாக இருந்து வந்த நிலையில், இன்றைய கூட்டத்தில் கட்சியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தலைவர்கள் மேடையில் ஏறி உரையாற்றியது அங்கிருந்த தொண்டர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு நடைபெறும் இந்த முக்கியக் கூட்டத்தில், கட்சியின் அமைப்பு ரீதியான மாற்றங்கள் வெளிப்படையாகத் தெரிந்தன.

மாறிய பாணி: 'ஒன் மேன் ஷோ' முதல் 'கூட்டுத் தலைமை' வரை

பொதுவாக தவெக கூட்டங்களில் விஜய் வருகை தருவதும், அவர் மட்டும் அல்லது ஆதவ் அர்ஜுனா. புஸ்ஸி ஆனந்த் போன்றோர் மட்டும் பேசுவதும் தான் வழக்கமாக இருந்தது. ஆனால் இன்று:

இளம் தலைவர்களுக்கு வாய்ப்பு: கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில அளவிலான இளம் நிர்வாகிகள் மேடையில் பேச அனுமதிக்கப்பட்டனர்.

அனுபவத்தின் தாக்கம்: 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையன், அதிமுக-வில் கடைபிடிக்கப்படும் "ஜனநாயக மேடை" கலாச்சாரத்தை தவெகவிலும் புகுத்தியுள்ளார்.

திராவிடக் கட்சிகளின் பாணி: திமுக மற்றும் அதிமுக போன்ற பாரம்பரியக் கட்சிகளில் இருப்பது போல, இரண்டாம் கட்டத் தலைவர்கள் மூலம் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் யுக்தி இன்று தவெகவில் அரங்கேறியது.

செங்கோட்டையன்

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு மிக்க செங்கோட்டையன், தவெகவின் உயர்மட்ட நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பின் கொண்டு வந்த முதல் அதிரடி மாற்றம் இது எனக் கூறப்படுகிறது.

"ஒரு கட்சி ஆலமரமாக வளர வேண்டும் என்றால் அதன் விழுதுகளும் (இரண்டாம் கட்டத் தலைவர்கள்) பேச வேண்டும். தலைவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தால் அது ஒரு இயக்கமாக மாறாது," என செங்கோட்டையன் ஆலோசனை வழங்கியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகம் வேகம்

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் குழு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ள நிலையில் க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி காலை முதலே நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். வரும் வழியில் எல்லாம் தேர்தல் ஆணையம் விசில் சின்னத்தை தவெகவுக்கு வழங்கிய நிலையில் அதனை மக்கள் மத்தியில் சேர்க்கும் விதமாக விசில் அடித்தபடியே வந்ததை பார்க்க முடிந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+