தோண்ட தோண்ட கட்டிலுக்கு அடியில் ஷாக்.. அதே வீட்டில் மகள் எப்படி? 1 வருட மர்மத்துக்கு பள்ளத்தில் விடை
சென்னை: கிரைம் செய்திகள் பெருமளவு இன்று இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றன.. நேற்றுகூட தெலங்கானா மாநிலத்தில் ஒரு உச்சக்கட்ட கொடுமை நடந்துள்ளது.. செகந்திராபாத் அருகே உள்ள ஜவஹர் நகர் பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தனது ரத்தத்தையே பாலாக்கி வளர்த்த அம்மாவை, ஒரு பெண் இப்படியும் செய்வாரா? என்ற ஷாக்கில் போலீசார் உள்ளனர்.. அப்படி என்னதான் நடந்தது?
அஞ்சு எனப்படும் அந்த இளம்தாய், கருத்து மோதல் காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வாழ்பவர்.. ஒரு தனியார் நிறுவனத்தில் கடினமாக உழைத்து தனது 2 மகள்களையும் வளர்த்து வந்துள்ளார்.

கிரைம் நியூஸ்
இந்நிலையில், அஞ்சுவின் 2வது மகளான இஷிகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மவுன்டியராஜ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில் மகளின் காதலை அறிந்த அஞ்சு, அதனை வன்மையாக கண்டித்துள்ளார். ஆனால், அம்மாவின் பேச்சைக் கேட்காத இஷிகா, அஞ்சு இல்லாத நேரங்களில் மவுன்டியராஜை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனால் தாய்-மகள் இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்தன. ஒருகட்டத்தில், "நாம் இருவரும் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இவள் உயிரோடு இருக்கக்கூடாது" என இஷிகா தனது காதலனிடம் ஒரு பயங்கரத் திட்டத்தை தீட்டியுள்ளார்.
கட்டிலுக்கு அடியில் ஷாக்
அதன்படி, கடந்த வருடம் மே மாதம் ஒரு நாள் இரவு, அஞ்சு தூங்கி கொண்டிருந்தபோது, இஷிகாவும் அவரது காதலன் மவுன்டியராஜும் இணைந்து அஞ்சுவைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டார்கள்..
கொலை செய்த பிறகு உடலை அப்புறப்படுத்துவதில் சிக்கல் வரும் என்று அஞ்சிய மகள், தாங்கள் தூங்கும் அதே படுக்கையறையில், கட்டிலுக்கு அடியில் ஒரு பெரிய பள்ளத்தை தோண்டினார்.. அதில், அஞ்சுவின் உடலை போட்டு புதைத்து மூடினார்.. அதன் பிறகு எதுவுமே தெரியாதது போல் இருந்துவிட்டார்.. இதில் அதைவிட அதிர்ச்சி, அதே பெட்ரூமில்தான் இஷிகா கடந்த 1 வருடமாகவே தங்கி தூங்கி வந்துள்ளார்..
பெட்ரூமில் மகளின் அதிர்ச்சி செயல்
தனது அம்மாவை தேடுவது போல நாடகமாடிய இஷிகாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியது. எனவே இஷிகாவை பிடித்து விசாரித்துள்ளார்.. தொடர் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய இஷிகாவை போலீசார் துருவித் துருவி விசாரித்தபோதுதான், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். வட்டாட்சியர் முன்னிலையில் வீட்டின் தரை தோண்டப்பட்டபோது, அழுகிய நிலையில் அஞ்சுவின் உடல் மீட்கப்பட்டது.
பெற்றத் தாயைக் கொன்று, ஓராண்டு காலம் அதே சடலத்தின் மீது கட்டில் போட்டுத் தூங்கிய மகளின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இஷிகா மற்றும் அவரது காதலன் மவுன்டியராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
ஒரு வருட மர்மம்
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் தேர்தல் சோதனைகள் ஒருபுறம் நடந்தாலும், மனித நேயமற்ற இத்தகைய குற்றங்கள் மக்களை நிலைகுலைய வைத்து வருகின்றன..
அதிலும், பெற்ற தாய், தனது மகளின் எதிர்காலத்திற்காக பாடுபட்ட நிலையில், அதே மகளின் கையாலேயே கொலை செய்யப்பட்டு, அவர் வாழ்ந்த வீட்டின் படுக்கையறை கட்டிலுக்கு அடியிலேயே புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications