தோண்ட தோண்ட கட்டிலுக்கு அடியில் ஷாக்.. அதே வீட்டில் மகள் எப்படி? 1 வருட மர்மத்துக்கு பள்ளத்தில் விடை
சென்னை: கிரைம் செய்திகள் பெருமளவு இன்று இந்தியாவில் தலைவிரித்தாடுகின்றன.. நேற்றுகூட தெலங்கானா மாநிலத்தில் ஒரு உச்சக்கட்ட கொடுமை நடந்துள்ளது.. செகந்திராபாத் அருகே உள்ள ஜவஹர் நகர் பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளின் மீதான நம்பிக்கையையே கேள்விக்குறியாக்கியுள்ளது. தனது ரத்தத்தையே பாலாக்கி வளர்த்த அம்மாவை, ஒரு பெண் இப்படியும் செய்வாரா? என்ற ஷாக்கில் போலீசார் உள்ளனர்.. அப்படி என்னதான் நடந்தது?
அஞ்சு எனப்படும் அந்த இளம்தாய், கருத்து மோதல் காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வாழ்பவர்.. ஒரு தனியார் நிறுவனத்தில் கடினமாக உழைத்து தனது 2 மகள்களையும் வளர்த்து வந்துள்ளார்.

கிரைம் நியூஸ்
இந்நிலையில், அஞ்சுவின் 2வது மகளான இஷிகாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த மவுன்டியராஜ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆரம்பத்தில் மகளின் காதலை அறிந்த அஞ்சு, அதனை வன்மையாக கண்டித்துள்ளார். ஆனால், அம்மாவின் பேச்சைக் கேட்காத இஷிகா, அஞ்சு இல்லாத நேரங்களில் மவுன்டியராஜை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
இதனால் தாய்-மகள் இடையே அடிக்கடி மோதல்கள் வெடித்தன. ஒருகட்டத்தில், "நாம் இருவரும் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இவள் உயிரோடு இருக்கக்கூடாது" என இஷிகா தனது காதலனிடம் ஒரு பயங்கரத் திட்டத்தை தீட்டியுள்ளார்.
கட்டிலுக்கு அடியில் ஷாக்
அதன்படி, கடந்த வருடம் மே மாதம் ஒரு நாள் இரவு, அஞ்சு தூங்கி கொண்டிருந்தபோது, இஷிகாவும் அவரது காதலன் மவுன்டியராஜும் இணைந்து அஞ்சுவைக் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டார்கள்..
கொலை செய்த பிறகு உடலை அப்புறப்படுத்துவதில் சிக்கல் வரும் என்று அஞ்சிய மகள், தாங்கள் தூங்கும் அதே படுக்கையறையில், கட்டிலுக்கு அடியில் ஒரு பெரிய பள்ளத்தை தோண்டினார்.. அதில், அஞ்சுவின் உடலை போட்டு புதைத்து மூடினார்.. அதன் பிறகு எதுவுமே தெரியாதது போல் இருந்துவிட்டார்.. இதில் அதைவிட அதிர்ச்சி, அதே பெட்ரூமில்தான் இஷிகா கடந்த 1 வருடமாகவே தங்கி தூங்கி வந்துள்ளார்..
பெட்ரூமில் மகளின் அதிர்ச்சி செயல்
தனது அம்மாவை தேடுவது போல நாடகமாடிய இஷிகாவின் நடவடிக்கைகளில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியது. எனவே இஷிகாவை பிடித்து விசாரித்துள்ளார்.. தொடர் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய இஷிகாவை போலீசார் துருவித் துருவி விசாரித்தபோதுதான், அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். வட்டாட்சியர் முன்னிலையில் வீட்டின் தரை தோண்டப்பட்டபோது, அழுகிய நிலையில் அஞ்சுவின் உடல் மீட்கப்பட்டது.
பெற்றத் தாயைக் கொன்று, ஓராண்டு காலம் அதே சடலத்தின் மீது கட்டில் போட்டுத் தூங்கிய மகளின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இஷிகா மற்றும் அவரது காதலன் மவுன்டியராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
ஒரு வருட மர்மம்
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் மற்றும் தேர்தல் சோதனைகள் ஒருபுறம் நடந்தாலும், மனித நேயமற்ற இத்தகைய குற்றங்கள் மக்களை நிலைகுலைய வைத்து வருகின்றன..
அதிலும், பெற்ற தாய், தனது மகளின் எதிர்காலத்திற்காக பாடுபட்ட நிலையில், அதே மகளின் கையாலேயே கொலை செய்யப்பட்டு, அவர் வாழ்ந்த வீட்டின் படுக்கையறை கட்டிலுக்கு அடியிலேயே புதைக்கப்பட்டிருக்கும் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications