பூ கட்டும் சிறுவனை அரிவாளால் வெட்டிய பள்ளி மாணவன் - நெல்லை மாவட்டத்தில் பயங்கரம்!
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 16 வயது சிறுவனை, 11 ஆம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டு விட்டு, பூ கட்டும் தொழில் செய்து வரும் சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் அருகே, மன்னார்கோவிலில் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும், பூ கட்டும் தொழில் செய்து வரும் சிறுவனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், வீட்டிற்குச் சென்ற 11ஆம் வகுப்பு மாணவன், வீட்டில் இருந்து அரிவாளை எடுத்துச் சென்று, பூக்கட்டும் சிறுவனை வெட்டியதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த சிறுவன் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நெல்லை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications