சோழிங்கநல்லூர் "மாமியார்".. இந்த வயதிலா? ஆனாலும் முத்துவுக்கு இம்புட்டு கோபம் ஆகாது.. கீழே உருண்ட தலை
சென்னை: ஆட்டை வெட்டுவது போல, கழுத்தை அறுத்துள்ளார் முத்து.. இவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
சென்னை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முத்து... இவர் கூலி வேலை செய்து வருபவர்... இவருக்கு சரசு, புண்ணியவதி என்று 2 மனைவிகள் இருக்கிறார்கள்..

4 பிள்ளைகள்: இவர்களில் முதல் மனைவி சரசுவுக்கு ஒரு மகனும், இரண்டாவது மனைவி புண்ணியவதிக்கு, ரமேஷ், ரஞ்சித், மகாலட்சுமி, இந்திரா என்று 4 பிள்ளைகளும் உள்ளனர். புண்ணியவதி சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார்..
புண்ணியவதியின் மகளான மகாலட்சுமிக்கு திருமணமாகிவிட்டது.. இந்த மகாலட்சுமியின் கணவர் ஜெயராஜுக்கும் தன்னுடைய மனைவி புண்ணியவதிக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக முத்துவுக்கு சந்தேகம் எழுந்தது. அதாவது, மாமியார் - மருமகனுக்கும் இடையே கள்ள உறவு இருப்பதாக சந்தேகப்பட்டு, அது தொடர்பாக புண்ணியவதியிடமும் தகராறும் செய்து வந்துள்ளார்..
முத்து - புண்ணியவதி இடையே அடிக்கடி வாக்குவாதமும், சண்டையும் தினமும் வந்துபோயுள்ளது.. அப்படித்தான் நேற்றும் தம்பதிக்குள் தகராறு வெடித்துள்ளது.. வாக்குவாதம் முற்றி கைகலைப்பும் வந்துவிட்டது.. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த முத்து, இளநீர் சீவும் அரிவாளால் புண்ணியவதி கழுத்தை அறுத்து வீசினார்..
மகள் சந்திரா: இதைப்பார்த்து பதறியடித்து கொண்டு அவரது மகள் சந்திரா ஓடிவந்தார்.. அவரையும் அரிவாளால் வெட்ட முயன்றார்.. இதில் சந்திராவுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. புண்ணியவதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததை கண்ணால் பார்த்ததுமே, முத்து பயந்துபோனார்.. உடனே அங்கிருந்து தப்பிஓடினார்..
வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்த சந்திராவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சந்திராவுக்கு 11 தையல்கள் போடப்பட்டு, தொடர்ந்து சிகிச்சையும் தரப்பட்டு வருகிறது. தகவலறிந்த செம்மஞ்சேரி பகுதி போலீசார், விரைந்து வந்து புண்ணியவதியின் உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்..
தலைமறைவு: பிறகு வழக்கு பதிவு செய்து, புண்ணியவதியை கொலை செய்த, முத்துவை கண்டுபிடிக்க முயன்றார்.. ஆனால், எந்த க்ளூவும் கிடைக்காததால், சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தையுமே ஆய்வு செய்தனர்.. அப்போதுதான் முத்து சிக்கினார்.. இதையடுத்து, விரைந்து சென்று முத்துவை கைது செய்த போலீசார், கொலை குறித்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
புண்ணியவதிக்கு 46 வயதாகிறதாம்.. இந்த வயதில் இப்படி சந்தேகப்பட வேண்டாம் என்று புண்ணியவதி முத்துவிடம் சொல்வாராம்.. ஆனாலும், முத்து யார் சொல்லியும் கேட்காமல், தொடர்ந்து மனைவியை டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது.. தொடர்ந்து முத்துவை போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications