பொறுத்து பொறுத்து பார்த்த வியாபாரிகள்.. ஓவர் மக்கள் கூட்டம்.. 4 நாள் கடையடைப்பு.. திடீர் அறிவிப்பு
திருக்கழுக்குன்றம் வியாபாரிகள் 4 நாட்கள் கடைகளை மூட முடிவு
செங்கல்பட்டு: பொறுத்து பொறுத்து பார்த்தார்கள் கடை வியாபாரிகள்.. மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை.. அதனால் 4 நாட்களுக்கு கடைகளை அடைத்துவிடுவது என செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் முடிவெடுத்துவிட்டனர்..!
தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.. இதற்காக முழு லாக்டவுனும் போடப்பட்டுள்ளது.. அத்துடன், அத்தியாவசிய தேவைகளுக்காக காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டும் கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பலரும் இதை காதில் வாங்காமல் தேவையில்லாமல் வெளியில் நடமாடி கொண்டிருக்கிறார்கள்.. இவர்களை எல்லாம் மடக்கி பிடித்து நம் போலீசாரும் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.

நேரம்
கடைகளை திறந்து வைத்திருக்கும் நேரத்தை வகுத்திருந்தாலும், இந்த குறிப்பிட்ட நேரத்திலும் மக்கள் நிறைய கூடுகிறார்கள்.. இதனால், கடைகளிலும் கூட்டம் அலைமோதுகிறது... எல்லாரும் மாஸ்க் போட்டிருக்கிறார்கள், ஆனால் சமூக இடைவெளி கடைப்பிடிப்பதில்லை..

முடிவு
பொதுவாக, கடைகள் அனைத்துமே சிறியதாக இருப்பதால், அதற்குள் சரீர இடைவெளியை பின்பற்றுவது கடினம்தான் என்றாலும், ஒருவர் பின் ஒருவராக சென்று பொருட்களை வாங்கலாம்.. ஆனால், நம் மக்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குவிந்துவிடுகிறார்கள். இப்போதைக்கு கடைகள்தான் கொரோனாவை பரப்பும் இடங்களாக மாறி கொண்டிருக்கின்றன.

பரவல்
இப்படிப்பட்ட சூழலில்தான் செங்கல்பட்டு மாவட்ட வியாபாரிகள் சேர்ந்து ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர்.. பொதுமக்களின் நலன் கருதி, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும், அரசுக்கு ஒத்துழைப்பு தரும் விதமாகவும் இன்று முதல் வரும் 22ம் தேதி வரை அதாவது 3 நாட்களுக்கு அனைத்து கடைகளும் மூடப்படும் என்று திருக்கழுக்குன்றத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

4 நாட்கள்
இன்று முதல் 3 நாட்கள் என்றால், 4வது நாள் ஞாயிற்றுக்கிழமை.. அன்றைய தினம் லாக்டவுன் என்பதால், மொத்தம் 4 நாட்களுக்கு கடை மூடப்பட்டிருக்கும்.. தொற்று இவ்வளவு வீரியமாக பரவி கொண்டிருப்பது தெரிந்தும், கட்டுப்பாடின்றி நம் மக்கள் கடைகளில் குவிந்து விடுவதால், 4 நாளைக்கு கடையை மூடிவிட வியாபாரிகள் முடிவு எடுத்துவிட்டனர்..

விழிப்புணர்வு
இந்த மாதிரியான ஒரு முடிவை, அடுத்தடுத்த மாவட்டங்களிலும் கடைக்காரர்கள் ஒன்றுசேர்ந்து எடுத்துவிட்டால், நமக்குதான் சிக்கல்.. எனவே, இனியாவது தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தால் நன்றாக இருக்கும்..!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications