3 மாநகராட்சிகளில் கடைகள் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5மணி வரை திறந்திருக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சிகளில் இன்று மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 வரை கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால் மே 1ம் தேதி முதல் வழக்கமான நேரமாக பிற்பகல் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

    தமிழக அரசு நேற்று இது தொர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை, கோவை, மதுரை ஆகிய மூன்று மாநகராட்சி பகுதிகளில் அமலில் இருந்த முழு ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ள நிலையில், வியாழக்கிழமை முதல் ஏற்கனவே இருந்த ஊரடங்கு நிலையே தொடரும்.

    Shops in 3 corporations will be open from 6am to 5pm today

    ஆனால் இன்று மட்டும் பொதுமக்கள் அத்தியாவசியப்பொருட்களான காய்கறி, பழங்கள், மளிகைப்பொருட்கள் வாங்குவதற்கு வசதியாக அவற்றை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

    வரும் மே1ம் தேதி முதல் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

    கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு எளிதாகவும், அதிதீவிரமாகவும் பரவும் தன்மையுள்ள கடும் நோய்தொற்றாகும். அத்தியாவசிய பொருட்களை வாங்க அவசரம் காட்டமால் , பொறுமை காத்து, சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடித்து முகக் கவசம் அணிந்து கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+