பரவும் டெங்குவை பார்த்து பயம் வேண்டாம்.. சித்தாவில் வழியிருக்கு.. இந்த இலைகளை சாப்பிடுங்க!
சென்னை: டெங்கு காய்ச்சலால் ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளை கூட முறையான சித்த மருத்துவத்தின் மூலம் சுலபமாக சரி செய்துவிடலாம் என நம்பிக்கை அளிக்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
டெங்கு காய்ச்சல் போன்ற நோய்களுக்கு ஓர் உயிரைக் கூட பலி கொடுக்கக் கூடாது என்று கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே உறுதி எடுத்து வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டுத் தான் இருக்கிறது. நோயின் தாக்கத்தை பாதிக்கப்பட்டவர்கள் மிகவும் தாமதமாக அறிந்து கொள்வதால் தான் உயிரிழப்பு நேரிடுகிறது.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அகற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். ஆனால் பல இடங்களில் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் ஆய்வும் நடத்துவதில்லை, கொசு உற்பத்தியாக கூடிய அடைசலான பொருட்களை மக்களும் அப்புறப்படுத்துவதில்லை.
இதன் விளைவாக டெங்கு பரவல் வேகமாக வருகிறது. இதனிடையே டெங்கு காய்ச்சலுக்கு சித்த மருத்துவ முறையில் பிரதானமாக பரிந்துரைக்கப்படுவது கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு ஆகிய மூன்றும் தான். மனிதனின் ரத்த தட்ட அணுக்கள் பல்லாயிரக்கணக்கில் குறைந்தாலும் கூட அதனை சித்த மருத்துவத்தின் மூலம் சரி செய்து விட முடியுமாம்.
கபசுரக் குடிநீர், நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு என எதுவாயினும் 5 முதல் பத்து பதினைந்து மில்லி வரை தான் குடிக்க வேண்டுமாம். இதனிடையே டெங்கு பாதிப்பால் ரத்த தட்டணுக்கள் குறைந்து ரத்தக் கசிவு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானால் சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி 'இம்பூரல்' மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல் இங்கு குறிப்பிட்டு கவனிக்க வேண்டிய தகவல் என்னவென்றால், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் மருத்துவர்களின் ஆலோசனையின்றி சித்த மருந்துகளை கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீட்டு வைத்தியம் என்ற பெயரில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர் தாங்களாகவே சித்த மருந்துகளை வாங்கிக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் அவர்களுக்கு பாலில் சுக்கு, அதிமதுரம், மஞ்சள் உள்ளிட்டவைகளை கலந்துகொடுக்கலாம். அதே போல் இஞ்சித் தேன், தூதுவளை சூப், ஆடாதொடை சாறு உள்ளிட்டவற்றை அளவான முறையில் கொடுக்கலாம்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications