ரொம்ப பிரச்சினை கொடுக்குறாங்க.. என்னை நீங்கள் பார்த்துக்கோங்க.. "மாநாடு" மேடையில் சிம்பு கண்ணீர்!
சென்னை: ரொம்ப பிரச்சினை கொடுக்கறாங்க, ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன் என மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சிம்பு கண்ணீர் மல்க பேசினார்.
Recommended Video
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாநாடு. இதில் எஸ்ஏ சந்திரசேகர், எஸ் ஜே சூர்யா, மனோஜ், கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்டி தயாரித்துள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவிருந்த நிலையில் தற்போது நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலம்பரசன் மாநாடு
இந்த நிலையில்தான் இன்று காலை மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிலம்பரசன், மாநாடு ரிலீஸ் குறித்த பிரச்சினைகளை கூறும் போது துக்கம் தாளாமல் உணர்ச்சிவசப்பட்டு அழுதார். அவர் பேசுகையில் என்னுடைய படங்களுக்கு பிரச்சினை வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

ரிலீஸ்
சுற்றி சுற்றி நிறைய பேர் பிரச்சினை செய்கிறார்கள். ஆனால் அவற்றை எல்லாம் தாக்குப்பிடித்து நிற்கும் ஒரு தயாரிப்பாளரால் மட்டும்தான் இந்த படத்தை எடுக்க முடியும் என்பது தெரிந்துவிட்டது. அப்போதுதான் நான் சுரேஷ் காமாட்சியிடம் இந்தப் படத்தை நீங்கள் எடுங்கள் என நான் சொன்னேன். அவரும் எத்தனையோ பிரச்சினைகளைத் தாண்டி படத்தை ரிலீஸ் வரை கொண்டு வந்துவிட்டார்.

யுவன்சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா எனக்கு மிகவும் பிடித்தமான இசையமைப்பாளர். நான் எவ்வளவு தொல்லை கொடுத்தாலும் அவர் தாங்கிக் கொள்வார். அத்தனை பொறுமையாக அவர் இருப்பதால் அவரது ராசி, நட்சத்திரத்தை கேட்டுள்ளேன். அதே ராசி , நட்சத்திரம் உள்ள பெண்ணைத்தான் நான் திருமணம் செய்ய வேண்டும் என சொல்வேன். இந்த படத்திற்காக நான் மற்றும் பட யூனிட்டே நிறைய ரிஸ்க் எடுத்துள்ளார்கள்.

கண்ணீர்
ரொம்ப பிரச்சினை கொடுக்குறாங்க... ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். என் பிரச்சினைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என கூறி மேடையில் சிம்பு அழுதுவிட்டார். தமிழ் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சிம்புவின் எந்த படத்தையும் ரிலீஸ் செய்ய விடாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்கள் என காவல் துறை ஆணையரிடம் சிம்புவின் தாய் உஷா ராஜேந்தர் புகார் அளித்திருந்தார். மேலும் இது போல் தொடர்ந்து யாராவது பிரச்சினை கொடுத்தால் முதல்வர் வீட்டு வாசலில் உண்ணாவிரதம் இருப்பேன் என உஷா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications