Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் கொண்டு வந்த சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படை குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த படை, Moral போலீஸை போல செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

பெண்களுக்கு எதிரான குற்றம் என்பது இதற்கு முன்னர் இருந்த எல்லா அரசுகளுக்கும் தலைவலியை கொடுத்து வந்திருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த பிரச்சனையை சரிகட்ட.. முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற உடனே, சிங்கப்பெண்கள் அதிரடிப்படையை கொண்டு வந்தார்.

Singapen Special Force

Moral போலீஸ் என்றால் என்ன?

பேப்பரில் எழுதப்படாத சமூக ஒழுக்கங்கள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் ஒரு பிரிவினர்தான் Moral போலீஸ் (ஒழுக்கநெறி காவலர்கள்) என்று அழைக்கப்படுகின்றனர். பொது வெளியில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து வந்தால் கேள்வி கேட்பது, தலைமுடி ட்ரெண்டுக்கு ஏற்றார் போல வெட்டியிருந்தால் அதை தவறு என்று சொல்வது, ஆண்-பெண் தனியாக வெளியில் சுற்றக்கூடாது என்று சொல்வது.. இதெல்லாம்தான் Moral போலீஸ் செய்யும்.

சிங்கப்பெண்கள் அதிரடிப்படை

சிங்கப்பெண்கள் அதிரடிப்படை காவலர்கள் இதுபோன்ற டோனுடன் பேசுகிறார்கள் என்று பல்வேறு தரப்பினரும் விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர். உதாரணமாக திருப்பூர் பேருந்து நிலையத்தில் பெண்களிடம் பேசிய சிங்கப்பெண்கள் அதிரடிப்படை அதிகாரி ஒருவர், நம்மிடமும் தவறு இருக்கிறது என்றும். நம்முடைய தவறை திருத்திக்கொள்ள வேண்டும் என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார். இதெல்லாம் யார் கேட்டார்கள்? பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறை செய்யும் வேலை, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக மாற்றுவதுதான்.

இந்த நேரத்திற்கு நீ எதுக்கு அங்க போன? ஏன் அவன் கூட போன? அவன் என்ன கணவனா? இப்படியான கேள்விகள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் காவல்துறையே எழுப்புவதை மகளிர் உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டி, அதை தவறு என்று கூறியிருக்கின்றனர்.

சரி என்னதான் தீர்வு?

சரியா டிரஸ் போட்டா.. தெரியாத ஆளுடன் பேசலனா.. நைட் நேரம் தனியா வெளிய போகலனா.. ஏன் குற்றம் நடக்கப்போகுது? என்கிற கேள்வி நம்மில் பலருக்கும் எழலாம். ஆனால், குற்றத்திற்கான புள்ளி அது கிடையாது. பெண்களை இந்த சமூகம் போக பொருளாக மாற்றியிருப்பதுதான் குற்றத்திற்கான காரணம். பெண் நம்மை போன்ற சரிசமமான ஒரு உயிர் என்பதை மறப்பதும், சினிமாக்களிலும், விளம்பரங்களிலும் அவர்களை கவர்ச்சி பொருளாக சித்தரிப்பதும்தான் இந்த குற்றங்களுக்கு காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

அதில் மாற்றம் ஏற்படுத்தாத வரை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டேதான் இருக்கும் என்றும், சிங்கப்பெண்கள் அதிரடிப்படையினர் Moral போலீசாக செயல்படாமல் இருக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+