இதுதான் நம்ம தமிழ்நாடு.. இளையான்குடி "மசூதியில்" நுழைஞ்சது யார் தெரியுமா? சிலிர்க்கும் சிவகங்கை: ஆஹா
சென்னை: அங்கே ராமர் சிலை திறக்கப்பட்ட தினத்தில், இங்கே சிவகங்கை இளையான்குடியில் நடந்த சம்பவம், தமிழக மக்களை புல்லரிக்க வைத்துவருகிறது.. அப்படி என்ன நடந்தது?
இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை வந்தாலே, திருப்புவனம் முதுவந்திடல் கிராமமாக இருந்தாலும்சரி, தஞ்சாவூர் காசவளநாடு புதூர் கிராமமாக இருந்தாலும் சரி, களைகட்டிவிடும். இங்குள்ள இந்துக்கள் மிக சிறப்பாக மொகரம் பண்டிகையை இங்கு சிறப்பாக கொண்டாடுவார்கள்.

அறுவடை: ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கம். அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் அங்குள்ள இந்துக்கள் அவைகளை தொடங்குவார்கள்.. அந்தவகையில், மதநல்லிணக்க உணர்வுகள் தமிழக மக்களிடம் தென்பட்டு வருகின்றன.
அவ்வளவு ஏன்? சமீபத்தில் மிக்ஜாம் புயல் பாதிப்பின்போதுகூட, சென்னை பூந்தமல்லி மசூதியின் அறிவிப்பு பலரையும் நெகிழ வைத்திருந்தது.. "அனைத்து சமூக மக்களும் பள்ளிவாசலில் தங்கலாம். உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பள்ளிவாசல் தொழுகைக்கு மட்டும் அல்ல" " என்ற இந்த அறிவிப்பானது, காண்போரை நெகிழ வைத்தது.. உருக வைத்தது.. சிலிர்க்க வைத்தது!!

பள்ளிவாசல்: தங்குவதற்கு இடமின்றி அவதிப்பட்ட அனைத்து மதங்களை சேர்ந்தவர்களுமே, மசூதிக்குள் திரண்டனர்... அவர்களுக்கு வயிறார உணவு தரப்பட்டது.. இதோ இப்போது சிவகங்கை மாவட்டம், இளையான்குடியிலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் மஸ்ஜிதே இலாஹி பள்ளிவாசல் திறப்பு விழா கடந்த 21ம் தேதி நடைபெற்றது.. இந்த விழாவில் முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், அந்த கிராமத்தை சேர்ந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருமே பங்கேற்றனர்..
பஸ் ஸ்டாண்டு: ஊர் முழுவதுமுள்ள வீதிகளிலும், தெருமுனைகளிலும், பஸ் ஸ்டாண்ட்களிலும், இந்த விழாவை வரவேற்று பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.. இந்துக்கள் தாம்பூலத்தில் நெல்மணிகள், மிளகாய், வெற்றிலைப் பாக்கு போன்றவற்றை சீர்வரிசையாக பள்ளிவாசலுக்கு எடுத்து வந்தார்கள்..
மற்றொருபுறம் கிறிஸ்தவர்கள் பாதிரியார் ரமேஷ் தலைமையில் மெழுகுவர்த்தி, பழங்களை சீர்வரிசையாக கொண்டு சென்றார்கள்.. பிறகு, 150 கிடாக்கள் வெட்டப்பட்டன.. மொத்தம் 7 ஆயிரம் பேருக்கு கமகமக்கும் மட்டன் பிரியாணி பரிமாறப்பட்டது.. மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் நடந்த இந்த விழா காண்போரை சிலிர்க்க வைத்தது.
அரவக்குறிச்சி: இதுமட்டுமல்ல, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி வழியாக பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரை போய்க் கொண்டிருந்தார்களாம்.. அப்போது, பழனி பக்தர்களுக்கு பள்ளபட்டி இஸ்லாமியர்கள் வாட்டர் பாட்டில், ஜூஸ், பிஸ்கட் பாக்கெட், கால் வலிக்கான ஆயின்மென்ட், செல்போன் சார்ஜ் செய்வதற்காக பிளக் பாயிண்ட் வசதி, மினரல் வாட்டர் இவ்வளவையும் தந்து வழியனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இந்த சம்பவங்கள் எல்லாமே மனித மனங்களை நெகிழ செய்து வருகிறது. மனித பிறப்பின் அருமையையும், அதன் உன்னதத்தையும், ஒவ்வொருமுறையும் இயற்கை சீற்றங்கள், நமக்கு உணர்த்திவிட்டு செல்கின்றன..
மதநல்லிணக்கம்: எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும், சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதாபிமானமும், ஈரம் கசியும் உள்ளமும், இங்கிருக்கும்வரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இந்த "சகோதர உறவுகள்" நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன... தழைத்தோங்கட்டும் மனித நேயம்..!!! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்.. !!!
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications