கொளுத்தி எடுத்த பட்டாசு விற்பனை.. சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு வர்த்தகம்!
சென்னை: சிவகாசியில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ.7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை கடந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில் இந்தாண்டு கூடுதல் விற்பனை ஆகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. புதுப்புது பட்டாசு ரகங்களுக்கு சிறுவர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளியில் பட்டாசுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. புத்தாடை, இனிப்பு, வித விதமான உணவு வகைகளுடன், பட்டாசுகள் இல்லாத தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டமே கிடையாது. சிறுவர்கள், சிறுமியர் மட்டுமல்லாது பெரியவர்களும் பட்டாசுகளை வெடித்து மகிழ்வது வழக்கம்.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசுக்கு பெயர்போன சிவகாசிக்கு வெளியூர் மக்கள் படையெடுத்து பட்டாசுகள் வாங்கி சென்றனர். சிவகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளில் பட்டாசுகள் வாங்க வெளியூர் வாடிக்கையாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி பட்டாசு கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து தங்களுக்கு தேவையான பட்டாசு ரகங்களை தேர்ந்தெடுத்து வாங்கிச் சென்றனர்.
ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனை நடைபெற்று வந்தாலும், ஏராளமான மக்கள் பட்டாசுக் கடைகளுக்கு நேரில் வந்து தங்களுக்குப் பிடித்தமான பட்டாசுகளை ஆன்லைன் வர்த்தக விலையை விடவும், குறைந்த விலைக்கு சிவகாசி பட்டாசுக் கடைகளில் வாங்கிச் சென்றனர்.
இந்த ஆண்டு வழக்கமான பட்டாசு ரகங்களுடன், புது வகையான பட்டாசு வகைகளும் ஏராளமான சந்தையில் விற்பனைக்கு வந்ததால், புதுப்புது பட்டாசுகளை சிறுவர்- சிறுமியர்கள்- இளைஞர்கள்- பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி சீசனக்காக புதிய ரக பட்டாசுகள் அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கான புதிய ரக பட்டாசுகளான பீட்சா, வாட்டர் மெலன், ஓரியோ பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களை நினைவுபடுத்தும் வகையில் பட்டாசுகளும், குழந்தைகளுக்காக கதாயம், வேல், கிட்டார், சிலிண்டர் உள்பட 30க்கும் மேற்பட்ட பல புது ரக பட்டாசுகளும் விற்பனை செய்யப்பட்டன.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சிவகாசியில் இந்த ஆண்டு ரூ.7 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரூபாய் 6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையான நிலையில் அதை விட, பட்டாசு விற்பனை நடப்பு ஆண்டு ரூபாய் 1000 கோடி அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications