Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் வேளச்சேரி, தரமணி, பெருங்குடி.. ஆறு பறக்கும் ரயில் நிலையங்கள் அடியோடு மாறுது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை மேம்படுத்த இருக்கிறது. இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய நிலையங்களில் சிறந்த பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் போன்ற வசதிகளைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

சென்னையின் மிகவும் காஸ்ட்லியான பகுதி என்றால், அது கடற்கரையை ஒட்டியுள்ள தென்சென்னை பகுதிகள் தான். குறிப்பாக செல்வது என்றால், மந்தைவெளி, மயிலாப்பூர், சந்தோம், பட்டினம்பாக்கம், அடையாறு, எம்ஆர்சி நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, நீலாங்கரை, வேளச்சேரி, கிண்டி, நந்தனம், கோட்டூர்புரம், ராஜா அண்ணாமலைபுரம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகள் தான்.

Six MRTS stations to be upgraded by Chennai Metro Rail soon full details

இங்கு தான் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துளளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில், வேலை செய்ய இங்கு தான் வருகிறார்கள். இதன் காரணமாக பறக்கும் ரயில் வழித்தடத்தில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்துசெல்கிறார்கள். அப்படி வந்து செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் நிலையங்கள் எல்லாமே பாழடைந்த பங்களா போல் தான் இருக்கும்.

எந்த ரயில் நிலையமும் சரியான பராமரிப்புடன் இருக்காது. அந்தரயில் நிலையங்கள் எல்லாவற்றையும் முறையாக பராமரித்து வணிக வளாகம் போல் அல்லது மால் போல் மாற்றினால், ரயில்வேக்கு மிகப்பெரிய வருவாய் வரும். இதனை உணர்ந்த சென்னை மெட்ரோ நிறுவனம், பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை அதிநவீன முறையில் மேம்படுத்த போகிறது.

முதற்கட்டமாக பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை மேம்படுத்த இருக்கிறது. இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய நிலையங்களில் சிறந்த பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் போன்ற வசதிகளைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

புதிய ரயில்களை வாங்குவதற்கும், பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள பணிமனை மற்றும் பராமரிப்பு புனரமைப்பதற்கும் சிஎம்ஆர்எல் டெண்டர்களை வெளியிட உள்ளது. ரயில்வேயிடம் இருந்து எம்ஆர்டிஎஸ்-ஐ சிஎம்ஆர்எல்-க்கு மாற்றுவதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

சென்னையில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை உள்ள ரயில் வழித்தடத்தில் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் பரங்கிமலை வரை வேளச்சேரி ரயில்கள் எல்லாம் நீட்டிப்பு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ரயில்களை இயக்கலாம் என்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சான்றிதழ் கிடைத்ததும் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படி பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால், வடபழனி வழித்தட மக்கள், தாம்பர வழித்தட மக்கள்,மயிலாப்பூர் வழித்தட மக்கள் எளிதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்னை முழுக்க ரயிலிலேயே சென்றுவிட முடியும். பல வருட காத்திருப்பும் முடிவுக்கு வரும். வேளச்சேரி பரங்கிமலை ரயில் ஓடும் நாள் தான் சென்னைக்கு உண்மையில் அன்று தான் சிறப்பான நாளாக இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+