சென்னையில் வேளச்சேரி, தரமணி, பெருங்குடி.. ஆறு பறக்கும் ரயில் நிலையங்கள் அடியோடு மாறுது
சென்னை: பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை மேம்படுத்த இருக்கிறது. இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய நிலையங்களில் சிறந்த பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் போன்ற வசதிகளைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
சென்னையின் மிகவும் காஸ்ட்லியான பகுதி என்றால், அது கடற்கரையை ஒட்டியுள்ள தென்சென்னை பகுதிகள் தான். குறிப்பாக செல்வது என்றால், மந்தைவெளி, மயிலாப்பூர், சந்தோம், பட்டினம்பாக்கம், அடையாறு, எம்ஆர்சி நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, நீலாங்கரை, வேளச்சேரி, கிண்டி, நந்தனம், கோட்டூர்புரம், ராஜா அண்ணாமலைபுரம், சோழிங்கநல்லூர் போன்ற பகுதிகள் தான்.

இங்கு தான் ஏராளமான தொழில் நிறுவனங்கள் அமைந்துளளன. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில், வேலை செய்ய இங்கு தான் வருகிறார்கள். இதன் காரணமாக பறக்கும் ரயில் வழித்தடத்தில் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்துசெல்கிறார்கள். அப்படி வந்து செல்லும் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் நிலையங்கள் எல்லாமே பாழடைந்த பங்களா போல் தான் இருக்கும்.
எந்த ரயில் நிலையமும் சரியான பராமரிப்புடன் இருக்காது. அந்தரயில் நிலையங்கள் எல்லாவற்றையும் முறையாக பராமரித்து வணிக வளாகம் போல் அல்லது மால் போல் மாற்றினால், ரயில்வேக்கு மிகப்பெரிய வருவாய் வரும். இதனை உணர்ந்த சென்னை மெட்ரோ நிறுவனம், பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை அதிநவீன முறையில் மேம்படுத்த போகிறது.
முதற்கட்டமாக பறக்கும் ரயில் வழித்தடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால் பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள ஆறு ரயில் நிலையங்களை மேம்படுத்த இருக்கிறது. இந்திரா நகர், கஸ்தூரிபா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி மற்றும் வேளச்சேரி ஆகிய நிலையங்களில் சிறந்த பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் போன்ற வசதிகளைப் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
புதிய ரயில்களை வாங்குவதற்கும், பறக்கும் ரயில் வழித்தடத்தில் உள்ள பணிமனை மற்றும் பராமரிப்பு புனரமைப்பதற்கும் சிஎம்ஆர்எல் டெண்டர்களை வெளியிட உள்ளது. ரயில்வேயிடம் இருந்து எம்ஆர்டிஎஸ்-ஐ சிஎம்ஆர்எல்-க்கு மாற்றுவதற்காக ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
சென்னையில் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை உள்ள ரயில் வழித்தடத்தில் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் எப்போது வேண்டுமானாலும் பரங்கிமலை வரை வேளச்சேரி ரயில்கள் எல்லாம் நீட்டிப்பு செய்யப்பட அதிக வாய்ப்பு உள்ளது. ரயில்களை இயக்கலாம் என்று தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் சான்றிதழ் கிடைத்ததும் ரயில்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி பறக்கும் ரயில் வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால், வடபழனி வழித்தட மக்கள், தாம்பர வழித்தட மக்கள்,மயிலாப்பூர் வழித்தட மக்கள் எளிதாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்னை முழுக்க ரயிலிலேயே சென்றுவிட முடியும். பல வருட காத்திருப்பும் முடிவுக்கு வரும். வேளச்சேரி பரங்கிமலை ரயில் ஓடும் நாள் தான் சென்னைக்கு உண்மையில் அன்று தான் சிறப்பான நாளாக இருக்கும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications