Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இளையராஜா இதில் வெல்வாரா, தோற்பாரா என்பது வேறு விஷயம்.. ஆனால்? எஸ்கேபி கருணா உருக்கமான பதிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியதாக கூறி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரபல எழுத்தாளர் எஸ்கேபி கருணா, இளையராஜாவை ஆதரித்து பதிவிட்டுள்ளார்.

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அனுமதியின்றி குணா பட பாடலை பயன்படுத்தியாக கூறி பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு காதலன்... பாடலை படத்தில் பயன்படுத்தியதற்காகவும், அதற்கு முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு இளையராஜாவின் வழக்கறிஞர் சார்பில் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

SKP Karuna supports Ilayaraja for sending notices to manjummel Boys group

பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமை சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் இளையராஜாவிற்கு எதிராகவும் ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. குறிப்பாக பணம் வாங்கி கொண்டு இளையராஜா பாடலை இசைத்துள்ள நிலையில், அதற்கு உரிமை கோர முடியாது என குரல்கள் அதிகமாக எழுந்துள்ளன. அதேநேரம் இசையை உருவாக்கியவர் என்ற முறையில் அது படைத்தவருக்கே சொந்தம் என்று இளையராஜாவுக்கு ஆதரவாகவும் வாதிடுகிறார்கள். இந்நிலையில் பிரபல எழுத்தாளர் எஸ்கேபி கருணா, இளையராஜாவை ஆதரித்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், "முதல்முறையாக இதை நான் பேசுகிறேன்..

யுவன், அனிருத், ச.நா ஏன், முந்தாநாள் இசையமைக்க வந்தவனிடம் கூட இந்த தயாரிப்பாளர், cook,.dish லாஜிக் எல்லாம் பேச முடியாது. ஏன்? அவர்கள் போடும் காண்டிராக்ட் அப்படி! அவர்கள் பணம் வாங்கி இசையமைக்கும் படத்திலேயே அவர்களின் பாடலை எத்தனை முறை, எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பது வரையில் ஒப்பந்தம் போட்டு விடுகின்றனர். நான் தான் பாடினேன், நான் தான் தபேலா வாசித்தேன், மிக்சிங் பண்ணேன் என்றெல்லாம் ஒருத்தரும் அவர்களிடம் உரிமை கோரி வர முடியாது. ஏனெனில், அவர்களிடமும் ஒப்பந்தம் வாங்கப்படுகிறது.

இளையராஜா விஷயம் வேறு! அவர் முந்தைய தலைமுறை.

பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் அவரிடம் அடம் பிடித்து வாங்கிய பாடலையே படத்தில் பயன்படுத்த சிச்சுவேஷன் இல்லாமல் டைட்டில் ஓடும்போது போட்டு வீணடித்த அயோக்கியர்களின் காலம் அது.

அவருக்கும் இதெல்லாம் தெரியாது. சிலர் அவரை ஏமாற்றி அவரது பாடல்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் நிரந்தர உரிமம் (perpetual licence) ஆக வாங்கி உள்ளனர். அது இயற்கை நியதிக்கு எதிரானது. அதை எதிர்த்து அந்த நிறுவனங்களுடன் அவர் சட்டப்போராட்டம் நடத்துகிறார். அதில் வெல்வாரா, தோற்பாரா என்பதெல்லாம் வேறு விஷயம்.

ஆனால், அவருக்கு அந்த உரிமை உள்ளது. ஒருவேளை அவர் இந்தப் போராட்டத்தில் வென்று, அதன்மூலம் அவருக்கு புதிய வருமானம் வந்தாலும் அவற்றை திரையிசைக் கலைஞர்களின் சங்கத்துக்கே முழுமையாக செல்லும்படி எழுதித் தந்துள்ளார். அவரது வாரிசுகளுக்குக் கூட தரவில்லை.

SKP Karuna supports Ilayaraja for sending notices to manjummel Boys group

மஞ்சுமல் பாய்ஸ் குழுவிற்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் கூட அந்தச் சட்டப் போராட்டத்தின் ஒரு பகுதிதான். ஒரு வழக்கில் தொடர்புள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்படுவதைப் போல இயல்பானது. அவர்களிடம் அந்தப் பாடலை பயன்படுத்தும் உரிமையை விற்ற நிறுவனம் அதை எதிர்கொள்வார்கள்.

இதையெல்லாம் செய்தி ஆக்கி இம்ப்ரெஷன் தேடும் ஊடகங்கள் இந்தத் தலைமுறையின் சாபக்கேடு. தனிப்பட்ட முறையில் அவர் பேசும் பேச்சுகள், செயல்களால் அவர்மீது ஏற்படும் கோபங்கள் இயல்பானவை. ஆனால், அதை முழுக்க உழைப்பாலும், அறிவாலும் உருவான அவரின் மேதைமையின் மீது வன்மமாகக் காட்டுவது மனிதர்களின் கீழமை. இயலாமை. போதாமை." இவ்வாறு எழுத்தாளர் எஸ்கேபி கருணா தனது பதிவில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+