"எவ்வளவு பழிகள்.. அவதூறுகள்.." சட்டசபையிலேயே உணர்ச்சிகரமாக பேசிய முதல்வர் ஸ்டாலின்.. பொளேர்!
சென்னை: எனக்கு எதிராக சொல்லப்படும் பழிகள் என்னை முடக்கி விடாது, எனக்கு இது மேலும் உத்வேகத்தையே கொடுக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டசபையில் உணர்ச்சிகரமாக பேசினார்.
Recommended Video
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு, மின் பிரச்சனை, நீட் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், கொரோனாவிற்கு எதிராக தமிழ்நாடு அரசு மேற்கொண்டு இருக்கும் தடுப்பு நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.

உருக்கம்
தனக்கு எதிராக வைக்கப்படும் அரசியல் விமர்சனங்கள் குறித்து உணர்ச்சிகரமாக பேசிய முதல்வர் ஸ்டாலின், என் மீது சொல்லப்பட்ட பழிகள், அவதூறுகள், அவமானங்கள் மேலும் உழைக்க உந்துகின்றன. என் மீது சொல்லப்படும் பழிகள் என்னை முடக்கி விடாது. எனக்கு இது மேலும் உத்வேகத்தையே கொடுக்கும். தலைவரின் மகன் என நான் பகட்டு காட்டியதில்லை.

பொறுத்து ஆட்சி
நேர்மையான முறையில், மக்கள் வாக்களித்து நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். பொறுத்தார் பூமியாழ்வார் என்பது பழமொழி. அப்படித்தான் நாங்கள் பொறுமையாக இருந்தோம். நாங்கள் பத்தாண்டுகள் பொறுத்திருந்து ஆட்சிக்கு வந்துள்ளோம். எங்கள் வாக்குறுதிகளை வேகமாக நிறைவேற்றி வருகிறோம். நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

நம்பிக்கை
யாரும் நம்பிக்கை இழக்க வேண்டாம். துளி அளவும் சந்தேகம் வேண்டாம். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனாவிற்கு இந்த அரசு முற்றுப்புள்ளி வைக்கும். அண்ணாவின் அரசியல் வாரிசு, கலைஞரின் கொள்கை வாரிசு நான். அவர்களின் பாதையில் நான் செல்வேன். அடக்கப்பட்ட யானைக்கு தான் மணி கட்டுவார்கள், திமுக அடக்கமுடியாத யானை.

திமுக
யானைக்கு 4 கால்கள் தான் பலம்.. அதுபோல திமுகவுக்கு சமூகநீதி, மொழிபற்று, சுயமரியாதை, மாநில உரிமை போன்ற 4 கொள்கைகள் தான் பலம். இந்த 4 கொள்கைகளை அடிப்படையாக வைத்தே திமுக செயல்படும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார். இன்று சட்டசபையில் பேசும் போது முதல்வர் ஸ்டாலின் மிகவும் உணர்ச்சிகரமாக காணப்பட்டார்.












Click it and Unblock the Notifications