உரிக்காமலேயே கண்ணீர் வரவைக்கும் சின்ன வெங்காயம்... விலை 1 கிலோ 100 ரூபாய்
மழையால் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்துள்ளதால் சின்ன வெங்காயத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதால் வெங்காயத்தை உரிக்காமலேயே கண்ணீர் விடுகின்றனர் இல்ல
சென்னை: வெங்காயம் உரிக்க உரிக்கத்தான் கண்ணீர் வரும். இப்போது மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் வெங்காயத்தின் விலையைக் கேட்டால் உரிக்காமலேயே கண்ணீர் விடுகின்றனர் இல்லத்தரசிகள். சென்னையிலும் தென் மாவட்டங்களிலும் ஒருகிலோ சின்ன வெங்காயம் கிலோ 100 ருபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெரிய வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளதாக வெங்காய வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா, மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. மழையால் தமிழகத்திற்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிற்கு வெங்காயம் குறைவான அளவே வருவதால் விலை உயர்ந்துள்ளது. கடந்த வாரங்களில் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையாகிறது. பல்லாரி வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த ஒரு சில வாரங்களாகவே உயர்ந்து வருகிறது. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் வைகை ஆற்றங்கரையை ஒட்டியுள்ள நிலங்களில் சின்ன வெங்காயம் அதிகம் பயிரிடப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டுள்ள செடிகளில் இன்னும் விளைச்சல் ஏற்படாததால், சந்தையில் சின்ன வெங்காயத்தின் வரத்து அடியோடு குறைந்துள்ளது.
போதுமான வரத்து இல்லாத காரணத்தால் சின்ன வெங்காயத்தின் விலை கிலோ ரூபாய்100 ஆக உயர்ந்துள்ளது. பொதுவாக ஆண்டிப்பட்டி காய்கறி சந்தைக்கு சராசரியாக ஒருநாளைக்கு 50 டன் வரையில் சின்னவெங்காயம் வரத்து இருக்கும். அதனால் தற்போது ஒருநாளைக்கு 500 முதல் ஒரு டன் வரையிலான வெங்காயம் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

வெங்காயத்தின் விலை உயர்வு காரணமாக சின்ன வெங்காயத்தை வாங்க முடியாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரா, கர்நாடகாவில் மழை தீவிரமடைந்துள்ளது. பண்டிகை காலங்களில் வெங்காயத்தின் தேவை அதிகரிக்கும். என்பதால் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications