சூரிய கிரகணம்.. அக்.14ல் நெருப்பு வளையம்.. வான வேடிக்கையை இந்தியாவில் பார்க்க முடியுமா?
சென்னை: அக்டோபர் 14 ஆம் தேதி சனிக்கிழமை நாளான மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணமும், பின்னர் 15 நாட்கள் கழித்து அதாவது அக்டோபர் 28 ஆம் தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. இந்த மாதத்தில் நிகழும் சூரிய சந்திர கிரகணங்கள் இந்தியாவில் தெரியுமா? எந்த நேரத்தில் பார்ப்பது என்று நாசா இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சந்திரனின் பகுதி சூரியனை விட பெரிதாக காட்சியளிக்க கூடிய அளவு பூமிக்கு அருகில் வர வேண்டும். அப்படி இருந்தால், அதுவே சூரிய கிரகணம். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படுகிறது. இதனால், சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். எல்லா அமாவாசை நாட்களிலும் கிரகணம் ஏற்பட வாய்ப்பு இல்லை.

பூமியை பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம் உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும். முழு சூரிய கிரகணகங்கள், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்கின்றன. இது அறிவியல் பூர்வமானது. அதேபோல், சூரிய கிரகணம் நிகழ்ந்து சரியாக 15 நாட்களில் சந்திர கிரகணம் நிகழும்.
சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. கிரகணத்தின் போது சூரியனின் ஒளி பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது.
அக்டோபர் 14 ஆம் தேதி சனிக்கிழமை நாளான மகாளய அமாவாசை அன்று சூரிய கிரகணம் ஏற்பட உள்ளது. இந்திய நேரப்படி இரவு 8.34 மணி தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை சூரிய கிரகணம் நடக்க உள்ளது. அதனால் இந்தியாவில் இந்த சூரிய கிரகணம் தெரியாது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவில் நன்றாக தெரியும் நெருப்பு வளையம் போல காட்சி அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருப்பு வளைய சூரிய கிரகணம் நிலவு பூமியிலிருந்து வழக்கத்தை விட சற்று தொலைவில் இருக்கும் போது நிகழ்கிறது. முழுமையான சூரியனை மறைக்காது. அதற்கு பதிலாக ஒரு மெல்லிய நெருப்பு வளையம் போல் தெரியும். இந்தியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியாது.
அதே நேரத்தில் நாசாவின் இணைய தள பக்கத்தில் சூரிய கிரகணம் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பூமியில் உள்ள எந்த ஒரு இடத்திலும் 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது. வெறும் கண்களால் சூரிய கிரகணத்தை நீங்கள் பார்த்தால், உங்கள் கண்களை சேதப்படுத்தலாம். ஏனென்றால், சூரியனின் புற ஊதா கதிர்வீச்சு உங்கள் விழித்திரையை சேதமாக்கி பார்வை குறைபாட்டினை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வளைய கிரகணத்தின் உச்ச நேரத்தில் கூட சூரியனை நேரடியாகப் பார்க்காதீர்கள் என்றும் நாசா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரியாக 15 நாட்கள் கழித்து அதாவது அக்டோபர் 28 ஆம் தேதி பவுர்ணமி நாளில் சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது. சந்திர கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 28ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணம் இந்திய நேரப்படி இரவு 11.31 மணிக்கு தொடங்கி 29ம் தேதி அதிகாலை 3.56 மணி வரை நீடிக்க உள்ளது. அதனால் இந்த கிரகணம் இந்தியாவில் மிகவும் தெளிவாக வெறும் கண்ணால் பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் அக்டோபர் 2, 2024 அன்று நிகழும். அப்போது பசிபிக் பெருங்கடல் மற்றும் தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் இருந்து நெருப்பு வளையம் தெரியும்.
ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு. சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் குடிக்கக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது.
கிரகணம் நிகழும்பொழுது பொது ஜனங்களை விட, கர்ப்பிணி பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே அவர்களுக்கு சிறப்பு. அப்படியே வெளியே வந்து வெளி வெளிச்சம் பட்டால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தையைப் பாதிக்கக்கூடிய சில கதிர் வீச்சுகள் தாக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறன. அதன் காரணமாக பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சில மாறுதல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications