Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீட்டிற்கு வந்து.. கதவை தட்ட போகும் இபி அதிகாரிகள்.. இபி பில்லே வராது.. இதை நோட் பண்ணுங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு மேற்கூரை சூரிய மின்சக்தி திட்டங்களை தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படும் நிலையில், மாநில மின்சார வாரியமான டான்ஜெட்கோ (TANGEDCO), மானியம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்களை பயன்படுத்தும் அரசின் உந்துதலை பிரதிபலிக்கிறது.

குறிப்பாக, பத்து கிலோவாட் (10 kW) வரையிலான மேற்கூரை சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவ இனி அனுமதி பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகள் உள்ளிட்ட பிற கட்டிடங்களில் இத்தகைய அமைப்புகளை நிறுவ முன் ஒப்புதல் தேவையில்லை என்றும், தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஒப்புதல் இல்லாமலேயே பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

tangedco eb

தமிழ்நாடு அரசு மேற்கூரை சூரிய மின்சக்தி

எனினும், நேரடியாக மின்சார வாரியம் மூலம் அனுமதி கோரப்படும் பட்சத்தில், மின்வாரிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வார்கள். சோலார் அமைப்பதற்கான வசதிகள், உரிய கட்டமைப்பு மற்றும் சாதகமான சூழல் அமைந்துள்ளதா என்பதை அவர்கள் சரிபார்ப்பார்கள்.

டான்ஜெட்கோ வெளியிட்டுள்ள மானிய விவரங்களின்படி, "உங்கள் வீட்டிற்கு சூரிய மேற்கூரை மூலம் சூரிய ஒளியின் பரிசை கொடுங்கள்!" எனும் அழைப்புடன், 1 kW-க்கு ₹30,000, 2 kW-க்கு ₹60,000, மற்றும் 3 kW-க்கு ₹78,000 வரை மானியம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "பூமியை பசுமையாக வைத்திருக்க உதவுங்கள். இணைய தளத்தில் முதலில் பதிவு செய்யவும். அடுத்து, விண்ணப்பியுங்கள்!" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கூரை சோலார் அமைப்பு

சதுர அடி பரப்பளவைப் பொறுத்து மேற்கூரை சோலார் அமைப்புகளுக்கு ₹50,000 முதல் ₹2-3 லட்சம் வரை செலவாகலாம். இந்த முதலீடு, வீட்டின் பெரும்பாலான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யும். மழை மற்றும் பனிக்காலங்களில் மட்டும் ஓரிரு மணி நேரம் மின்சார நிலையத்தின் துணை மின்சாரம் தேவைப்படலாம்.

உங்கள் வீட்டில் சோலார் அமைக்கப்பட்டிருப்பதை அரசுடன் பதிவு செய்வது அவசியம். இவ்வாறு பதிவு செய்வதன் மூலம், குறைந்தபட்ச மின்சாரத் தேவையை அரசு ஏற்கும் திட்டத்தின் கீழ் நீங்கள் பயன்பெறலாம். சாதாரணமாக, மாதத்திற்கு 100 யூனிட்டிற்கும் மேலான மின்சாரத் தேவையின்றி, 300 யூனிட் வரை இலவசமாகப் பயன்படுத்த முடியும் என அறியப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு ₹15,000 முதல் ₹18,000 வரை மின்சார செலவில் சேமிக்க முடியும். மேலும், உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தை விநியோக நிறுவனங்களுக்கு வழங்கலாம். இது மின்சார வாகனங்களை சார்ஜ் செய்வதற்கும் பயன்படும் என டான்ஜெட்கோ குறிப்பிட்டுள்ளது.

₹15,000 முதல் ₹18,000 வரை மின்சார செலவு

சோலார் பேனல்களை வழங்குதல், நிறுவுதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளில் பல விற்பனையாளர்களுக்கு தொழில்முனைவு வாய்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞர்களுக்கு இந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதாகவும், இது அரசுக்கு மின்சார செலவைக் குறைக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க சில தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவராகவும், சோலார் பேனல்கள் நிறுவ ஏற்ற சொந்தக் கூரையுடன்கூடிய குடியிருப்பு கொண்டவராகவும் இருத்தல் அவசியம். சரியான மின் இணைப்பு பெற்றிருப்பதோடு, வேறு எந்த சோலார் மானியத்தையும் பெற்றிருக்கக் கூடாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+