சென்னையில் மாமியாரை மருமகன் இப்படியுமா ஏமாற்றுவாங்க.. 35 லட்சம், 30 பவுன் தங்கம்.. போன பின் ஞானம்
சென்னை: சொத்துக்களுடன் தனியாக வசிக்கும் மாமியார்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டிய காலம் இது. பெற்ற மகளும், மருமகனுமே இந்த காலத்தில் பாசம் காட்டுவது போல் நடித்து சிறுக சிறுக பணம், நகை, சொத்துக்களை பறிக்கவும் வாய்ப்பு உள்ளது. பொதுவாகவே நமது சமூகத்தில் பெண்கள், தங்கள் மகளை பார்க்கும் அளவிற்கு, மருமகளை பார்ப்பது கிடையாது. இதை பயன்படுத்தி சில மருமகன்கள் சொத்துக்களை வளைத்துவிடுகிறார்கள். சென்னை அயனாவரத்தில் நடந்த சம்பவம் சற்று வித்தியாசமானது. அது பற்றி பார்ப்போம்.
இன்றைக்கு கணவனை இழந்து சொத்துக்களுடன் தனியாக வசிக்கும் மாமியார்கள் பலர், மருமகளை விட, மகளை தான் அதிகம் நேசிக்கிறார்கள். அதேபோல் மகனை விடவும் மருமகன் மீதும் சிலர் அதிக பாசம் காட்டுகிறார்கள். அப்படி காட்டப்படும் பாசத்தை தவறாக மருமகன்கள் பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது. சொத்து இருக்கும் வரை மகளும், மருமகனும், மாமியாரை தாங்கு தாங்கு என்று தாங்குவார்கள்.

மரியாதை போய்விடும்
மகன் வீட்டில் அதிகாரம் செய்யும் மாமியார், மருமகன் வீட்டில் போய் வேண்டிய உதவிகள், செலவுகளை செய்து வருவார். அப்போது, மருமகன், உங்களை போல் மாமியார் கிடைப்பார்களா என்பது போல் பாசம் காட்டி, பணம், நகைகளை சிறுக சிறுக பறிப்பார்கள். ஒரு கட்டத்தில் மகளும், மருமகனும் எல்லாவற்றையும் பறித்துவிடுவார்கள்.. எல்லாம் போன பின்னர், அந்த அளவிற்கு மரியாதை கிடைக்காத நிலை ஏற்படும். அப்போது தான் எதார்த்தம் என்னவென்று மாமியாருக்கு தெரியவரும். வேறுவழி இல்லாமல் மகளை நினைத்து நொந்து கொள்வார். பல இடங்களில் அப்படி நடந்து வருகிறது. சென்னை அயனாவரத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சசிகலாவின் மருமகன்
சென்னை அயனாவரம் திருமலை ராஜா தெருவை சேர்ந்த 59 வயதாகும் சசிகலாவிற்கு கணவர் இறந்துவிட்டார். சசிகலா தனது ஒரே மகளை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் வசிக்கும் 38 வயதாகும் வையாபுரி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு சசிகலாவின் மகள் விமான விபத்தில் இறந்து விட்டார். சசிகலா மட்டும் அயனாவரத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்,
35 லட்சம், 30 பவுன் தங்கம்
சசிகலாவின் மருமகன் வையாபுரி அடிக்கடி தனது மாமியாரிடம் பேசி நீங்கள் அயனாவரத்தில் தனியாக இருக்க வேண்டாம், உங்களது வீட்டை விற்று சென்னையில் ஒரு வீடு வாங்கி அதில் அனைவரும் ஒன்றாக இருக்கலாம் என கூறிவந்திருக்கிறார். அதனை நம்பி சசிகலாவும் 30 பவுன் நகைகள் மற்றும் ரூ.35 லட்சத்தை மருமகன் வையாபுரிக்கு கொடுத்துள்ளார்.
2வது திருமணம்
இதையடுத்து வையாபுரி வேரோறு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டிருக்கிறார். மாமியார் சசிகலாவிடம் வாங்கிய நகை, பணத்தை திரும்பி கொடுக்கவே இல்லை என்று கூறப்படுகிறத. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சசிகலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை ஏமாற்றிய வையாபுரியை கைது செய்தனர். அவரிடம் இருந்து சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
-
உலக தங்க மார்க்கெட்டே கதறப்போகுது.. புதின் போட்ட முக்கிய உத்தரவு.. தங்கத்தை அஸ்திரமாக மாற்றிய ரஷ்யா -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
சென்னையில் 6 சிட்டிங் திமுக எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. லிஸ்ட் -
கயிறு அவிழப்போகுது.. தங்கத்தின் 'திக் திக்' நிமிடங்கள்.. ஸ்விஸ் வங்கி விடுக்கும் பயங்கர வார்னிங்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
நிலத்தைத் தோண்டும்போது தங்கம், சிலைகள் கிடைத்தால் செய்ய வேண்டியவை? கவனிக்காவிட்டால் ஜெயில் நிச்சயம் -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
மூட்டை மூட்டையாக.. தங்கத்தை டன் கணக்கில் மார்க்கெட்டில் கொட்டிய துருக்கி.. ஏன் தெரியுமா? ஷாக் -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்











Click it and Unblock the Notifications