எல்லாம் ரெடி.. முழு AC.. சென்னையில் அடுத்த சில நாட்களில் திறக்கப்படும் புது பேருந்து நிலையம்! எங்கே?
சென்னை: சென்னையின் நான்காவது பேருந்து முனையம், குத்தம்பாக்கத்தில் 414 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இதன் பெரும்பாலான கட்டமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், முழுமையாக குளிரூட்டப்பட்ட இந்த புதிய முனையம் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஒரு தனியார் நிறுவனம் நிர்வகிக்க உள்ளது.
குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் பிப்ரவரிக்கு முன்பாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) இந்த பேருந்து நிலையத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.

ஏற்கனவே பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளை பிப்ரவரி மாதத்திற்குள் முடிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவரின் துறைசார்ந்த முன்னோடித் திட்டங்கள் பிரிவின் கீழ் வரும் 27 திட்டங்களின் தற்போதைய முன்னேற்றத்தை திடீரென ஆய்வு செய்தார். அந்த திட்டங்களை விரிந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, முன்னோடித் திட்டங்களின் எண்ணிக்கை முன்பு 155 ஆக இருந்தது. தற்போது இது 24 துறைகளின் கீழ் 288 திட்டங்களாக உயர்ந்து, ஒட்டுமொத்தமாக ₹3,17,693 கோடி செலவில் செயல்படுத்தப்படுகின்றன. இவற்றில் 85 திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்காக ஏற்கனவே நிறைவுபெற்றுவிட்டன; எஞ்சியவை பல்வேறு நிலைகளில் இருக்கின்றன.
ஸ்டாலின் உத்தரவு
ஆறு துறைகளின் செயலாளர்களுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், ₹87,941 கோடி மதிப்பிலான 27 திட்டங்களை ஸ்டாலின் மதிப்பீடு செய்தார். இத்திட்டங்கள் அனைத்தும் ஜனவரி 2026-க்குள் முழுமையாக முடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம்
குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம் பிப்ரவரிக்கு முன்பாக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (CMDA) இந்த பேருந்து நிலையத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது.
ஆய்வுக்குட்பட்ட திட்டங்களில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ், சிவகங்கை, மதுரை, நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கான ஒருங்கிணைந்த குடிநீர் திட்டங்களும், மதுரை வண்டியூர் ஏரி மேம்பாட்டுப் பணிகளும் அடங்கும்.
மேலும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கூத்தம்பாக்கம், செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையப் பணிகள், கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அருகே கட்டப்படும் ஆகாய நடைபாதை ஆகியவற்றின் முன்னேற்றத்தையும் அவர் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த பேருந்து நிலையம் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் 15 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கப்படும். ஒப்பந்ததாரர் முழு முனைய வளாகத்தையும் அதன் உள்கட்டமைப்புகளையும், அதாவது வாகன நிறுத்துமிடங்கள், போக்குவரத்துப் பகுதிகள், மாநகர போக்குவரத்துக் கழகப் பணிமனை, தங்கும் விடுதிகள் மற்றும் அனைத்து வசதிகளையும் இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பாவார்.
குத்தம்பாக்கம் புதிய புறநகர் பேருந்து நிலையம்
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய பராமரிப்புப் பணிகளையும் ஒப்பந்ததாரர் மேற்கொள்வார். ₹414 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் கிளாம்பாக்கம் ஆகியவற்றுடன் சென்னையின் நான்காவது பெரிய பேருந்து மையமாக விரைவில் செயல்படத் தொடங்கும்.
திருவள்ளூர் அருகே 24.8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குத்தம்பாக்கம் பேருந்து நிலையம், மேற்கு நோக்கிச் செல்லும் புறநகர் சேவைகளைப் பூர்த்தி செய்யும். இந்தத் திட்டத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்காக ஒன்பது ஏக்கர் நிலம், ஒரு காவல் நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை-4 உடன் முனையத்தை இணைக்கும் 18.2 ஏக்கர் அணுகல் சாலை ஆகியவை அடங்கும்.
பெருநகரப் பகுதி முழுவதும் பல மாதிரி போக்குவரத்து
பாதுகாப்பு, வாகன நிறுத்தம், விளம்பர மேலாண்மை மற்றும் தங்கும் விடுதி செயல்பாடுகள் போன்ற குறிப்பிட்ட நடவடிக்கைகளை ஒப்பந்ததாரர் துணை உரிமம் எடுக்கலாம் அல்லது அவுட்சோர்ஸ் செய்யலாம். பெருநகரப் பகுதி முழுவதும் பல மாதிரி போக்குவரத்து மையங்களை உருவாக்கும் CMDA-இன் பரந்த உத்திகளின் ஒரு பகுதியாக குத்தம்பாக்கம் முனையம் உள்ளது என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறினார்.
"நகர நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்கு சிறந்த வசதியை உறுதி செய்வதே இதன் நோக்கம்" என்று அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) SIDCO மற்றும் புதூர்மேடு சந்திப்பில் சாலை அடையாளங்கள் மற்றும் அறிவிப்புப் பலகைகளுடன் மேம்பாடுகளைச் செய்யத் தொடங்கியுள்ளது.
சென்னையின் பொதுப் போக்குவரத்து மையங்களை தனியார் வசம் ஒப்படைத்து, புனரமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ், பேருந்து நிலையங்களின் பராமரிப்புப் பணிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளவுள்ளன.
17.34 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட அம்பத்தூர் பேருந்து நிலையம் அடுத்த மாத தொடக்கத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்படவுள்ளது. 1.6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நிலையத்தில், 20க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களும், 26,000 சதுர அடியில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் நிர்வாக அலுவலகமும் அமையவுள்ளன.
Chennai's 4th Bus Terminal at Kuthambakkam being built at a cost of 414 Crs as viewed from above. Most works are over and should be opened soon. Fully air conditioned & to be operated by a Pvt player #Chennai #Bus pic.twitter.com/7ELQ8jOSQ4
— Chennai Updates (@UpdatesChennai) January 14, 2026
சென்னை பேருந்து நிலையம்
கடந்த ஆகஸ்ட் 25 அன்று திரு.வி.க. நகர் மற்றும் பெரியார் நகரில் இரண்டு புதிய பேருந்து நிலையங்கள் திறக்கப்பட்டன. சுமார் 18 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த நிலையங்களில் 24 பேருந்து நிறுத்தங்கள், 20 கடைகள், கழிப்பறைகள் மற்றும் காத்திருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன.
இந்த ஆண்டு மேலும் பல திட்டங்கள் வரிசையில் உள்ளன. இதில் அக்டோபரில் 97 கோடி ரூபாய் மதிப்பிலான செங்கல்பட்டு பேருந்து நிலையம், பெரம்பூரில் 8.1 கோடி ரூபாய் மதிப்பிலான முல்லை நகர் நிலையம் ஆகியவை அடங்கும். நவம்பரில் 14.36 கோடி ரூபாய் செலவில் கண்ணதாசன் நகர் நிலையமும், டிசம்பரில் 31.42 கோடி ரூபாய் செலவில் தண்டையார்பேட்டை பணிமனையின் நவீனமயமாக்கலும் திட்டமிடப்பட்டுள்ளன.
பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், துறைமுகம் ஆகிய இடங்களில் தலா 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் நான்கு சிறிய பேருந்து நிறுத்தங்களும் டிசம்பர் மாதத்திற்குள் தயாராகிவிடும். பெரிய திட்டங்கள் 2026-ஆம் ஆண்டுக்காகக் காத்திருக்கின்றன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications