"என்ன பிரச்சினை".. கடிதத்தில் கேட்ட இபிஎஸ்.. ஓபிஎஸ்ஸின் கோரிக்கை நிராகரிப்பு! அடுத்து என்ன நடக்கும்?
சென்னை: அதிமுக பொதுக் குழுவை தள்ளி வைக்கும் அளவுக்கு ஒரு பிரச்சினை இல்லாத போது பொதுக் குழுவை தள்ளி வைக்க முடியாது என ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த தனித்தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடி தரப்பு இந்த பொதுக் குழு கூட்டத்தை நல்ல சந்தர்ப்பமாக நினைத்து காத்திருக்கிறது.

முறியடிக்க
இதை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு வியூகம் வகுத்து வருகிறது. இந்த நிலையில்தான் மூத்த முன்னோடிகள் பிரச்சினையை கிளப்பியது. அதாவது நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் கழகத்தின் மூத்த முன்னோடிகளை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க வேண்டும் என எனக்கு தொடர்ந்து கடிதங்கள் வருகின்றன.

பொதுக் குழு கூட்டம்
இதனால் பொதுக்குழு கூட்டத்தை தற்போது ஒத்தி வைத்துவிட்டு வேறு ஒரு நாளில் மூத்த முன்னோடிகளையும் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து கூட்டத்தை நடத்தலாம் என கடிதம் எழுதியிருந்தார். இந்த கடிதம் எதுவும் தங்களுக்கு வரவில்லை என்றாலும், பொதுக் குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தெரிவித்தனர்.

ஓபிஎஸ் தரப்பு
இதனால் ஓபிஎஸ் தரப்பு சட்ட வல்லுநர்களை ஆலோசித்து வருகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த கடிதத்தில் பொதுக் குழுவை ஒத்தி வைக்கும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாத போது எதற்காக தள்ளி வைக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளாராம்.

நிராகரித்த இபிஎஸ்
இந்த கடிதத்தின் அதிகாரப்பூர்வ நகல் கிடைக்கவில்லை. பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமியே கடிதம் மூலம் தெரிவித்துவிட்டதால் இனி அடுத்த கட்ட முடிவுகள் என்னவாக இருக்கும், ஓபிஎஸ் தரப்பு எந்த மாதிரியான முடிவுகளை எடுக்கும் என்பது குறித்து பொறுத்திருந்து பார்ப்போம்.












Click it and Unblock the Notifications