“போதைப்பொருள் விற்பனையை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம்" - தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி
மதுரை: போதைப்பொருள் விற்பனையை தடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளோம் என தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் மோதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுவதை தடுக்க கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி தெரிவித்துள்ளார்.
மேலும், காவல்துறையினர் சட்டத்தை மீறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மன்னிப்பே கிடையாது என்றும் கந்துவட்டி, மணல்கொள்ளை, பொருளாதார மோசடி குற்றங்களை தீவிரமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

21 ஆவது மதுரை தென்மண்டல காவல்துறை ஐ.ஜியாக விஜயேந்திர பிதாரி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து மதுரை ரேஸ்கோர்ஸ் காலனி பகுதியிலுள்ள தென்மண்டல காவல்துறை ஐஜி அலுவலகத்தில் மதுரை டிஐஜி அபினவ்குமார் மற்றும் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து ஐஜி விஜயேந்திர பிதாரி பேசுகையில், "தென் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் சட்ட ஒழுங்கை பாதுகாப்பது, குற்றசம்பவங்களை குறைப்பது குறித்து அனைத்து மாவட்ட காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம்.
கந்துவட்டி, போதைப்பொருள் விற்பனை, மணல் கொள்ளை போன்றவற்றை தடுக்க தீவிரமாக பணியாற்ற உள்ளோம். குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றம் மூலமாக குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம். பெண்கள் குழந்தைகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து சைபர் கிரைம், பொருளாதார மோசடி போன்ற புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்ள்கள் விற்பனையை தடுக்க தொழில்நுட்பத்தினை பயன்படுத்த ஆலோசனை நடத்தவுள்ளோம்.
ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் காவல்துறை உயரதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதிகமான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்படக்கூடிய காவல் நிலையங்களில் குற்றத்தை குறைக்க நடவடிக்கை எடுத்து அந்த காவல் நிலையங்களை மாதிரி காவல் நிலையங்களாக மாற்றப்படும். காவல்துறையினர் சட்டத்தை மீறி தவறான செயல்பாடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், மன்னிப்பே கிடையாது" எனத் தெரிவித்தார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆயுதங்களை பயன்படுத்தி மோதலை ஏற்படுத்தும் வகையில் ரீல்ஸ் வெளியிடுவோர் மீதான நடவடிக்கை குறித்த கேள்விக்கு "இதுபோன்ற சமூக வலைதளங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம். கஞ்சா வழக்குகளில் கைது செய்யப்படக்கூடிய குற்றவாளிகளுடைய சொத்துக்களை மீட்பது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications