Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து.. தாம்பரம் வழித்தடம்.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக வார இறுதியில் மின்சார ரயில்களை பாராமரிப்பினை காரணம் காட்டி ரயில்கள் ரத்து செய்யப்படுவது பயணிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

சென்னையை பொறுத்தவரை பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை விட மின்சார ரயில்களில் தான் மக்கள் அதிகம் பயணிக்கிறார்கள். தினசரி லட்சக்கணக்கானோர் மின்சார ரயில்களை பயன்படுத்துகிறார்கள். சென்னையில் நான்கு வழித்தடங்களில் மின்சார ரயில்கள் ஓடுகின்றன. இதில் கடற்கரை தாம்பரம் இடையேயான வழித்தடம் மிகவும் முக்கியமான வழித்தடம் ஆகும்.

Southern Railway announced that 44 electric trains will be canceled tomorrow in Chennai

இந்த வழித்தடத்தில் சில நிமிடங்களுக்கு ஒரு முறை மின்சார ரயில்கள் செல்கின்றன. இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இயங்காவிட்டால் மொத்த சென்னையும் ஸ்தம்பித்துவிடும். அந்த அளவிற்கு மிகவும் முக்கியமான மின்சார ரயில் வழித்தடம் ஆகும்.. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக வார இறுதிகளில் பாராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் கணிசமாக ரத்து செய்யப்படுவது பயணிகளை கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பராமரிப்பு பணி காரணமாக தொடர்ந்து 4-வது வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரயில் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப் பட்டது" இவ்வாறு தெற்கு ரயில்வேயின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+