பயணிகளே நோட் பண்ணிக்கோங்க! சென்ட்ரல் - அரக்கோணம் இடையே இன்று 10 மின்சார ரயில்கள் ரத்து.. விவரம்
சென்னை: ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் இடையே 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்த விவரங்களை பார்க்கலாம்.
சென்னையில் மின்சார ரயில்கள் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெருமளவு தீர்த்து வைக்கின்றன. சாலை வழி பயணங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படும் என்பதால் மின்சார ரயில்களே பயணிகளுக்கு வரப்பிரசாதம் போல உள்ளது.

சரியான நேரத்திற்கு திட்டமிட்டபடி செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று விட முடியும் என்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்கள் செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் இதில் பயணம் செய்ய முடியும். இதனால் பயணிகள் கூட்டம் எப்போதும் ரயில்களில் அலைமோதுவதை காண முடியும்.
இதனிடையே இன்று சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் வழித்தடத்தில் 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
*ஆவடி பணிமனையில் பராமரிப்பு பணி நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து இன்று இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு பட்டாபிராம் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படும்.
* மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயிலும், மூர்மார்கெட்டில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
*அதேபோல, மூர் மார்க்கெட்டில் இருந்து இன்று இரவு 11.30 மணிக்கும், இரவு 11.40 மணிக்கும் புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுன்றன.
* அரக்கோணத்தில் இருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* திருவள்ளூரில் இருந்து இன்று இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும், பட்டாபிராமில் இருந்து இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படும்.
* பட்டாபிராமில் இருந்து இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.
* இதேபோல் ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயிலும், மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 12.15 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* ஆவடியில் இருந்து நாளை அதிகாலை 3.50 மணிக்கும், அதிகாலை 4 மணிக்கும் புறப்பட்டு, மூர்மார்க்கெட் செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications