சென்னையில் 'சிக்சர்' அடித்த தெற்கு ரயில்வே.. எழும்பூரில் நாளை முதல் எல்லாமே மாறுது.. குட் நியூஸ்
சென்னை: பொதுவாக ரயில்வே மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு.. சொன்ன சொல் தவறுவார்கள்.. குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க மாட்டார்கள் என்று கூறுவார்கள். ஆனால் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த மின்சார ரயில் சேவைகள், திட்டமிட்டதை விட இரண்டு நாட்களுக்கு முன்பாகவே, நாளை (ஏப்ரல் 3, வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் தொடங்குவதாக அறிவித்து தெற்கு ரயில்வே அசத்தி உள்ளது. சொன்ன சொல் தவற மாட்டான் இந்த கோட்டைச்சாமி என்பது போல் நடந்த இந்த மாற்றம் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த பிப்ரவரி 20-ம் தேதி முதல் எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது பிளாட்பாரங்களில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கியது. எந்த மாற்று வழியும் இல்லாததால், ஏப்ரல் 5-ம் தேதி வரை 'லைன் பிளாக்' அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பயணிகள் கடு்் அவதிப்பட்டார்கள். இந்நிலையில் மக்களின் சிரமத்தை உணர்ந்த ரயில்வேயின் சென்னை மண்டல அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் அதிரடி வேகத்தால், பணிகள் அனைத்தும் முன்கூட்டியே முடிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, ஏப்ரல் 5-ம் தேதி தொடங்க வேண்டிய ரயில் சேவைகள் ஏப்ரல் 3-ம் தேதியே (வெள்ளிக்கிழமை அதிகாலை 00:00 மணி முதல்) பயன்பாட்டிற்கு வருகிறது.

எனவே பிப்ரவரி 27 முதல் அமலில் இருந்த தற்காலிக ரயில் கால அட்டவணை முழுமையாக ரத்து செய்யப்பட்டு, பழைய கால அட்டவணை மீண்டும் நடைமுறைக்கு வரும். இனி மேல் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - அரக்கோணம் வழித்தடங்களில் தங்குதடையின்றி சீரான மின்சார ரயில் சேவை இனி கிடைக்கும். பணிகள் காரணமாக எழும்பூர் வரை வராமல் பகுதியளவு ரத்து செய்யப்பட்டிருந்த 44-க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இனி எழும்பூர் வழியாக பழையபடி இயங்கும்.
பயணிகள் கவனத்திற்கு: நாளை (03.04.2026) வெள்ளிக்கிழமை முதல் வார நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளுக்கான வழக்கமான கால அட்டவணையைப் பயணிகள் பின்பற்றலாம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த காலத்திற்கு முன்பே பணிகளை முடித்து, கோடை காலத்தில் பயணிகளின் சிரமத்தைக் குறைத்த ரயில்வே ஊழியர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications