சென்னை-செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை.. தெற்கு ரயில்வே மேஜர் அறிவிப்பு
சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில் சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது. இரு மார்க்கத்திலும் 10 மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து முதல் ரயில் அதிகாலை 3.55 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11.59 மணிக்கும் தாம்பரம் வரை இயக்கப்படும்.
சென்னையில் மின்சார ரயில் சேவைகள் பொதுமக்களின் முக்கியமான போக்குவரத்தாக உள்ளது. இதில் சென்னை கடற்கரை தாம்பரம், செங்கல்பட்டு வழித்தடம் மிக முக்கியமான வழித்தடம் ஆகும். இந்த வழித்தடத்தில் சுமார் 100 வருடங்களாக மின்சார ரயில் சேவை நடந்து வருகிறது. இந்த ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகளை தெற்கு ரயில்வே அடிக்கடி மேற்கொண்டு வருகிறது. அதற்காக மின்சா ரயில் சேவைகளை குறைப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளார்.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "பராமரிப்பு பணி காரணமாக, சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் செல்லும் மின்சார ரயில் சேவைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து முதல் ரயில் அதிகாலை 3.55 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11.59 மணிக்கும் தாம்பரம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் 10 நிமிடம் முதல் 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதே போல, தாம்பரத்தில் இருந்து முதல் ரயில் 3.55 மணிக்கும், கடைசி ரயில் 11.59 மணிக்கும் சென்னை கடற்கரைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில்களும் 10 முதல் 15 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும்.
மேலும், சென்னை கடற்கரையில் இருந்து முதல் ரயில் அதிகாலை 3.55 மணிக்கும், கடைசி ரயில் இரவு 10.45 மணிக்கும் செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் 20 நிமிடம் முதல் 30 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். அதே போல, செங்கல்பட்டில் இருந்து முதல் ரயில் அதிகாலை 4 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11 மணிக்கும் சென்னை கடற்கரை வரை இயக்கப்படுகிறது.
இந்த ரயில்களும் 20 நிமிடம் முதல் 30 நிமிட இடைவெளிகளில் இயக்கப்படும். அந்த வகையில், சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு இடையே வார நாட்களில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அட்டவணைகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு இரு மார்க்கத்திலும் 10 மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications