அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தென்மேற்கு பருவ மழை குறித்து சூப்பர் அப்டேட்
சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி வெயில் இன்றுடன் முடிகிறது. இதனால் இனி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் எனில் ஜுன் மாதத்தில் வழக்கமாக தென்மேற்கு பருவ மழை தொடங்கி விடும்.
இதற்காக காற்றழுத்த தாழ்வு பகுதிகள் கேரளாவை ஒட்டி உருவாகும்..இது சரியாக ஆண்டுதோறும் ஜுன் முதல் வாரத்தில் தொங்கும்.இந்த தென் மேற்கு பருவ மழை தான் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை மழையை கொடுக்கிறது.

எங்கு அதிக மழை
அதேநேரம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையால் தான் அதிக அளவு மழை பெறும். தென்மேற்கு பருவ மழையால் ஓரளவே மழை பெறும்.அதேநேரம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய அதாவது கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழையால் ஒரளவு நல்ல மழை பெய்யும்.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த சூழலில் தென்மேற்கு பருவ மழை ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்றையவானிலை அறிவிப்பில் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்க மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாயப்பு உள்ளது. எனவே வரும் 31ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

கேரளாவுக்கு மழை
இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு அரேபிய கடலில் புயல் சின்னம் இப்போது மேற்கு-மத்திய மற்றும் அதனுடன் தென்மேற்கு அரேபிய கடல் நடுப்பகுதியில் வெப்பமண்டல மட்டங்கள் வரை பரவியுள்ளது. குறைந்த காற்றழுத்த பகுதி மே 29ல் உருவாக வாய்ப்பு உள்ளது. முதல் காற்றழுத்த பகுதி மும்பையை தாக்காது என்று தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த 48 மணிநேரத்தில் கேரளாவில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
Recommended Video

தொடங்கியது மழைக்காலம்
வானிலை மையத்தின் அறிவிப்பின்படி இன்னும் ஒரு சில நாளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் புயல் சின்னமாக மாறி, கேரளாவில் ஜுன் முதல் நாளிலேயே மழை தொடங்க வாய்ப்பு உள்ளது. எனவே இனி இந்தியாவில் வரப்போகிறது தென்மேற்கு பருவ மழை. அடுத்த 4 மாதங்களுக்கு மழை காலம் தான் என்பதால் கொரோனா பிரச்னை குறையுமா காணாமல் போகுமா என்பது தெரிந்துவிடும்.
-
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications