எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்.. வென்டிலேட்டர், எக்மோ சிகிச்சை அளிப்பு- மருத்துவமனை
சென்னை: கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், இன்னும் ஐசியு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Recommended Video
அவருக்கு வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் எம்ஜிஎம் மருத்துவமனை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை, ஏற்றத்தாழ்வுடன் தொடர்ந்து காணப்படுகிறது.

வாழ்த்துக்கள்
ஒருநாள் பரவாயில்லை என்றும் மற்றொரு நாள் மோசமான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியாகியபடி உள்ளளது.
பல்வேறு பிரபலங்களும் எஸ்பி பாலசுப்பிரமணியம் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவ அறிக்கை
இந்த நிலையில்தான் இன்று மாலை எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எக்மோ சிகிச்சை
அந்த செய்தி குறிப்பு மேலும் கூறுகையில், கொரோனா பாதிப்பால், எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு வென்டிலேட்டர் மூலமாகவும், எக்மோ சிகிச்சையும் வழங்கப்பட்டு தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெறுகிறார்.

ஐசியூ சிகிச்சை
மருத்துவ நிபுணர் குழு தொடர்ந்து அவரது உடல்நிலையை உன்னிப்பாக கவனித்து சிகிச்சை அளித்து வருகிறது. அடிப்படையான மருத்துவ நிலைமையில் சரிவு இன்றி இப்போதைக்கு சீராக உள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். பிரார்த்தனைகள் செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications