கோயம்பேட்டில் குவிந்த ஐயப்ப பக்தர்கள்.. சபரிமலை செல்வோருக்கு ஹாப்பி நியூஸ்!
சென்னை: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னை கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூசை நாட்களில் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். இந்த நாட்களில் தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிவார்கள். தோராயமாக சுமார் 5 கோடி பக்தர்கள் வரை ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனை தரிசிக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து வருபவர்கள்தான் அதிகம். அந்த வகையில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோயில் நடை நேற்று பிற்பகல் திறக்கப்பட்டது. இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. எனவே, தரிசனத்திற்காக ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய புறப்பட்டிருக்கின்றனர்.

தமிழ்நாட்டில் ஐயப்ப பக்தர்களுக்கு வசதியாக சில சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஐயப்ப பக்தர்கள் பாதுகாப்பாகவும், வசதியுடன் சென்று திரும்பும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக கோயம்பேட்டிலிருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பக்தர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது. தவிர கிளாம்பாக்கம், திருச்சி, மதுரை, கடலூர் உள்ளிட்ட நகரங்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி நேற்று இந்த பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ஆா்.மோகன் இது குறித்து கூறுகையில், "பேருந்து இருக்கைகளை டிஎன்எஸ்டிசி செயலி மூலம் முன்பதிவு செய்துகொள்ளலாம். குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பேருந்து வசதி செய்து தரப்படும். சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி டிச.27 முதல் டிச.30 மாலை 5 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் டிச.26 முதல் 29-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு 94450 14452, 94450 14424, 94450 14463 எனும் கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.
பக்தர்களுக்கு இருக்கைகள் மற்றும் படுக்கை வசதியுடன் கூடிய குளிர்சாதன வசதி அல்லாத அதிநவீன சொகுசு பேருந்துககள் இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டிருப்பது ஐயப்ப பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications