ஊருக்கு போறீங்களா? தமிழக அரசு பஸ்களில் ஒரே நாளில் 35,140 முன்பதிவு.. தீபாவளிக்கு விறுவிறு புக்கிங்
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது. இதுகுறித்த முக்கிய தகவல்களை போக்குவரத்து துறை தற்போது வெளியிட்டிருக்கிறது.
வழக்கமாக, பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகையை கொண்டாடுவதற்காக மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம்.. இதனால், அரசு பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது..

படுக்கை வசதி: அதிலும், நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பஸ்களில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கியிருக்கிறார்கள்.. அந்தவகையில், அரசு விரைவு பஸ்களுக்கு 60 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்யும் நடைமுறையும் உள்ளது. இப்படி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்காகவே, தமிழக போக்குவரத்து துறையும் பல்வேறு பேருந்துகளை ஸ்பெஷலாகவே இயக்கி வருகிறது.
அந்தவகையில் நாடு முழுவதும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கு முந்தைய நாளுக்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.. அதன்படி, இன்று காலை நிலவரப்படி அக்டோபர் 29ம் தேதி பயணிக்க 10,542 பேரும், 30ம் தேதி பயணிக்க 9,402 பேரும் முன்பதிவு செய்திருந்தனர்.
பயணிகள்: இப்படித்தான் 2018 ஜனவரி 12ல் அதிகபட்சமாக 32,910 பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், இப்போது அதை விட அதிக பயணிகள் முன்பதிவு செய்திருக்கிறார்களாம்.
அந்தவகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் நிரம்பி விட்ட நிலையில், பண்டிகை முடிந்து நவம்பர் 3-ந் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமையன்று அங்கிருந்து புறப்பட்டு சென்னைக்கு திரும்புவதற்கும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. 1,500 பஸ்களுக்கு முதல் கட்டமாக முன்பதிவு நடந்து வருகிறது. இது தவிர வழக்கம் போல சிறப்பு பஸ்களும் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்பதிவுகள்: வழக்கமாக இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளுக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அடுத்த மாதம் 10 மற்றும் 12ம் தேதிகளில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எந்த இடத்திலிருந்து, எவ்வளவு பேருந்துகளை இயக்கலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு, போக்குவரத்துத்துறை அதனை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications