வீக் எண்ட் + முகூர்த்த நாள்! சொந்த ஊர்களுக்கு பறந்த மக்கள் - பேருந்து நிலையங்களில் இரவு செம கூட்டம்
சென்னை: மூகூர்த்த தினம் மற்றும் வார இறுதி நாட்களின் காரணமாக நேற்று 800 சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு இயக்கி இருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றதால் பேருந்து நிலையங்கள் கூட்டம் அலைமோதியது.
பொதுவாக வார இறுதி நாட்கள் என்றாலே பொதுமக்கள் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் முகூர்த்தி தினம் என்பதால் இந்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற உள்ளன.

எனவே உறவினர்கள் திருமணத்துக்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராக இருந்தனர். தனியார் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ள நிலையில் பொதுமக்கள் பயன்பெரும் வகையில் நேற்று 800 அரசு பேருந்துகளை அரசு இயக்கி உள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், "வார இறுதி நாள்கள் மற்றும் முகூா்த்த தினங்களை முன்னிட்டு, சென்னை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏராளமானோா் பயணம் செய்வாா்கள். இதனால், தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை சென்னையிலிருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 400 பேருந்துகள், திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து முக்கிய இடங்களுக்கும், பெங்களூரிலிருந்து பிற இடங்களுக்கும் 400 பேருந்துகள் என மொத்தம் 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வார இறுதியில் பயணிக்க இதுவரை 23 ஆயிரத்து 626 போ் முன்பதிவு செய்து உள்ளனா். இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது." என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் முன்பதிவு செய்த பயணிகள் ஏராளமானோர் நேற்று அரசு சிறப்பு பேருந்துகளின் மூலம் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். ஞாயிறு அன்று அவர் மீண்டும் திரும்பி செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications