தீபாவளி இனிதே முடிந்தது! சொந்த ஊரில் இருந்து சென்னை திரும்ப இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
சென்னை: தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இன்ற முதல் இயக்கப்படுகின்றன.
இது தொடர்பாக தமிழக அரசின் விரைவு போக்குவரத்து கழகத்தின் மேலாண்மை இயக்குனர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 2-ந்தேதி (இன்று) முதல் 4-ந்தேதி வரையில் தினந்தோறும் இயக்கக்கூடிய 2 ஆயிரத்து 92 பஸ்களுடன் 3 ஆயிரத்து 165 சிறப்பு பஸ்களும், பிற முக்கிய ஊர்களிலிருந்து 3 ஆயிரத்து 405 பஸ்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 846 பஸ்கள் இயக்கப்படும்.

எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தீபாவளி, பொங்கல், விடுமுறை நாட்களை சொந்த ஊர்களில் கொண்டாடவும் கழிக்கவும் சென்னையில் இருக்கும் மக்கள் படையெடுப்பது வழக்கம். அந்த வகையில் அவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் கடந்த திங்கள்கிழமை முதலே இயக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 5 நாட்கள் விடுமுறையை முடித்துக் கொண்டு சென்னை திரும்ப ஆயத்தமாகினர்.
அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் இருக்க இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications