புத்தாண்டு லீவு! ஊருக்கு போறீங்களா? சென்னை - நெல்லை சிறப்பு ரயில் அறிவிப்பு! புக்கிங் தொடங்கிடுச்சு
சென்னை: கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி நெல்லை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 28, ஜனவரி 4 ஆம் தேதி நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். இதேபோல் மறுமார்க்கமாக டிச 29, ஜனவரி 5 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு மாலை 3.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தாம்பரம் - நெல்லை இடையே இரண்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புத்தாண்டு விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக அறிவிக்கப்படு இருக்கும் இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. காலை 8 மணி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ரயில் புறப்படும் நேரம், நின்று செல்லும் இடங்கள் உள்ளிட்டவைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
கிறிஸ்துமஸ் - புத்தாண்டுக்கு சொந்த ஊர் செல்ல பயணிகள் கூட்டம் அலைமோதும். பேருந்து ரயில்களில் முன்பதிவு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை டூ தாம்பரம்
வண்டி எண் 06166 திருநெல்வேலியில் இருந்து டிசம்பர் 28 மற்றும் ஜனவரி 4 ஆம் தேதிகளில் இரவு 11.30 மணிக்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.
மறுமார்க்கத்தில் டிசம்பர் 29 மற்றும் ஜனவரி 05 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நெல்லை வந்தடையும். இரண்டு சேவைகளாக இந்த சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நின்று செல்லும் இடங்கள்
1 ஏசி பெட்டி, 2 ஏசி மூன்றடுக்கு பெட்டி, 9 படுக்கை வசதிகள் கொண்ட பெட்டி, 4 பொதுப்பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் 2 இந்த ரயிலில் இணைக்கப்பட்டு இருக்கும். இந்த ரயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருதாச்சலம் விழுப்புரம், மேல்வருத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications