சென்னை டூ மைசூர் சிறப்பு வந்தே பாரத் ரயில்.. இன்று முதல் சேவை! பெங்களூர், கோவை லிஸ்டில் புது நகரம்
சென்னை: கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்னையில் இருந்து இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், "தினமும் சென்னை சென்ட்ரல் - மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரம் 6 நாள்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை மட்டும் இயக்கப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் புதன்கிழமைதோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

அதன்படி இன்று நவம்பர் 29 ஆம் தேதி, டிசம்பர் 6 ஆம் தேதி, 13 ஆம் தேதி, 20 ஆம் தேதி, 27 ஆம் தேதி ஆகிய நாட்களில் சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. வழக்கமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் - மைசூரு ரயில் நிலையம் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலின் வழித் தடத்தில் இந்த ரயிலும் இயக்கப்படும். இதற்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கி உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல் சென்னை - கோவை இடையிலும் வந்தே பாரத் சிறப்பு ரயில் நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், "கூட்ட நெரிசலைத் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை சென்ட்ரல் - கோவை மற்றும் கோவை - சென்னை இடையே செவ்வாய்க்கிழமைகளில் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதன்படி சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் நவம்பர் 28 முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு 2.15 மணிக்கு கோவை சென்றடையும். மறுமாா்க்கமாக கோவை - சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் செவ்வாய் கிழமை நவம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை செவ்வாய் கிழமைகளில் கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட்டு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதேபோல், கடந்த 20 ஆம் தேதி முதல் சென்னை - பெங்களூரு இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை தொடங்கப்பட்டது. "சென்னை சென்ட்ரலிலிருந்து திங்கள்கிழமை மாலை 5.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சிறப்பு ரயில் (எண் 06031) காட்பாடிக்கு மாலை 6.48 மணிக்கும் பெங்களூருக்கு இரவு 10 மணிக்கும் சென்றடையும்.
மறுமாா்க்கமாக பெங்களூரை அடுத்த யஷ்வந்த்பூரில் இருந்து செவ்வாய்க்கிழமை நவம்பர் 21 ஆம் தேதி இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில் (எண் 06032) காட்பாடிக்கு நள்ளிரவு 2.28 மணிக்கும் சென்னை சென்ட்ரலுக்கு அதிகாலை 4.20 மணிக்கும் வந்தடையும். இதற்கான பயணச் சீட்டு முன்பதிவு தொடங்கப்பட்டு உள்ளது." என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
-
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications