சுதந்திர தின லீவு: நெல்லை, நாகர்கோயில் பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: சுதந்திர தினம் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து வேலை காரணமாகவும், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காகவும் தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னைக்கு வந்து செல்கின்றனர். சென்னையில் இருக்கும் வெளிமாவட்ட மக்கள் பலரும் வார இறுதி நாட்களில் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதனால், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அதேபோல, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அவ்வப்போது தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் அறிவித்து வருகிறது. அந்த வகையில், சுதந்திர தின விழா மற்றும் வார விடுமுறையையொட்டி பயணிகள் அதிக அளவில் ஊருக்குச் செல்வார்கள் என்பதால், செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இந்த ரயில்களுக்கான பதிவு இன்றுமுதல் தொடங்குகிறது. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருவதால் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருநெல்வேலியில் இருந்து ஆகஸ்ட் 13, 18 ஆகிய தேதிகளில் இரவு 10.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11 மணிக்கு செங்கல்பட்டு வந்தடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து ஆகஸ்ட் 14, 19 ஆகிய தேதிகளில் மாலை 5.55 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். மறுநாள் காலை 5.50 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர் வழியாக இயக்கப்படவுள்ளது.

அதேபோல, நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்துக்கு ஆகஸ்ட் 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.15 மணிக்கு தாம்பரம் வந்தடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 19, 24 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படவுள்ளது.
மேலும், மங்களூர்-கொச்சுவேலி இடையே ஆகஸ்ட் 17 ஆம் தேதியும், மறுமார்க்கமாக ஆகஸ்ட் 18 ஆம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டுக்கு தொடங்கியுள்ளதாகவும், பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications