தீயாய் பரவும் காய்ச்சல்..தமிழ்நாட்டில் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்
சென்னை:தமிழகத்தில் சளி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஏராளமானோர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் மக்களிடையே ஒருவித அச்சம் பரவி வருகிறது.
புதுச்சேரியிலும் காய்ச்சல் அதிகளவில் பரவி வருவதால் 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வருகிற 25ந்தேதி வரை புதுச்சேரி அரசு விடுமுறை அளித்துள்ளது. அதேபோல் தமிழகத்திலும் விடுமுறை அளிக்க பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

காய்ச்சல் பரவல்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், பருவமழைக்கும் முன்பாக இதுபோன்ற காய்ச்சல் வருவது வழக்கமான ஒன்று. தமிழ்நாடு முழுவதும் முழுவதும் சளி காய்ச்சல் பற்றி தற்போது தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. பருவநிலை மாற்றத்தின் போது காய்ச்சல் ஏற்படுவது சற்று அதிகரிக்கும்.

பன்றிக்காய்ச்சல்
H1N1 பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை 1166 ஆக உள்ளது.
பருவமழை தொடர்வதற்கு முன்பாக கூடுதல் முகாம்களின் நடத்த இதனால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

காய்ச்சல் முகாம்கள்
இந்த காய்ச்சல் முகாம்களுக்காக தமிழகத்தில் 476 நடமாடும் மருத்துவக் குழுக்கள் ஈடுபடுவார்கள்.பொதுமக்கள் காய்ச்சல் அல்லது அதற்கான பாதிப்பு இருந்தால் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னையில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 3 மற்றும் அதற்கு மேல் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள இடங்களில் 100 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறும். இதன் மூலம் பருவ கால காய்ச்சல் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications