உதயம் தியேட்டரை தொடர்ந்து.. அடுத்த ஷாக்.. சென்னையில் மூடப்படும் இன்னொரு பிரபல தியேட்டர்.. எங்கே?
சென்னை: உதயம் தியேட்டரை தொடர்ந்து சென்னையில் இன்னொரு பிரபல தியேட்டரும் மூடப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னையின் பிரபல தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் இடிக்கப்பட்டு உள்ளது. தற்போது இந்த திரையரங்கம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு உள்ளது. பழைய சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டரும் ஒன்றாகும். சென்னையின் பிரபலமான பகுதிகளில் உதயம் தியேட்டர் ஒன்றாகும். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது.

இங்கே மிகப்பெரிய 25 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. அலுவலகம் + குடியிருப்பு பாணியில் இங்கே அடுக்குமாடி கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே சென்னையில் பல முக்கிய பழைய ஹோட்டல்கள், இடங்கள் வாங்கப்பட்டு உயர் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
அப்படித்தான் தற்போது உதயம் தியேட்டரும் வாங்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஏன் இடித்தனர்:
கடந்த 2009ல்தான் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கை அதன் நிறுவன உறுப்பினர் பரமசிவம் பிள்ளை மீண்டும் வாங்கினார். சொத்துக்களை குடும்பத்திற்குள் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக ரூ.80 கோடிக்கு வாங்கினார். தற்போது அந்த தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி உள்ளது. அசோக் பில்லர் அருகே அமைந்துள்ள இந்த திரையரங்கம் 1983 இல் கட்டப்பட்டது.
இன்னொரு தியேட்டர்
உதயம் தியேட்டரை தொடர்ந்து சென்னையில் இன்னொரு பிரபல தியேட்டரும் மூடப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. வடசென்னையின் முதல் ஏசி தியேட்டரான பெரம்பூரில் உள்ள ஸ்ரீ பிருந்தா தியேட்டர் மூடப்பட உள்ளது.
வட சென்னையின் முதல் ஏசி திரையரங்கமாக இருந்த 1,170 இருக்கைகள் கொண்ட திரையரங்கம் அடுத்த சில தினங்களில் மூடப்படவுள்ளது. இங்கே பெரிய அடுக்குமாடி குடியிருப்பு + கமர்ஷியல் கட்டிடம் வர உள்ளது.
தமிழ் சினிமாவின் ஃபிலிம் ரீல் காலத்திலிருந்து டிஜிட்டல் யுகம் வரை பரிணாம வளர்ச்சி கண்ட தியேட்டர் இது. லோகநாதன் என்பவர் மூலம் தொடங்கப்பட்ட இந்த தியேட்டர் 1985 ஆம் ஆண்டு முதல் சினிமா உலகில் உள்ளது.
15 கிரவுண்டு நிலத்தில் பரந்து விரிந்துள்ள ஸ்ரீ பிருந்தா திரையரங்கம், லோகநாதன் மூலம் நிறுவப்பட்டு, நடிகர் ரஜினிகாந்தால் ஏப்ரல் 14, 1985 அன்று திறந்து வைக்கப்பட்டது. சூப்பர் ஸ்டாரின் அனைத்துப் படங்களையும் திரையிட்டதால் ரஜினி தியேட்டர் என்று பிரபலமாக அறியப்பட்டது. மோகன் மற்றும் லட்சுமி நடித்த உதய கீதம்தான் இங்கே வெளியான முதல் படம். டிராகன்தான் தற்போது அங்கே ஓடும் கடைசி படம்.
நான் சிகப்பு மனிதன், மாப்பிள்ளை (244 நாட்கள் ஓடியது), பாண்டியன் (174 நாட்கள்), மற்றும் அண்ணாமலை (150 நாட்கள்) உள்ளிட்ட எண்ணற்ற பிளாக்பஸ்டர்களை இந்த தியேட்டர் வெளியிட்டது.
இது சென்னையின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமாக இயங்கும் சினிமா தியேட்டர்களில் ஒன்றாக இருந்தது. ஆனால் அதன்பின் பெரிய தியேட்டர்கள் இங்கே வந்துவிட்டது. அதேபோல் பல மல்டிபிளக்ஸ் இங்கே வந்துவிட்டது. இதனால் இந்த தியேட்டரின் மவுசு குறைந்தது.












Click it and Unblock the Notifications