இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை? எப்படி நடக்கும் தெரியுமா?
சென்னை: இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக 2ம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதல் வாக்கு எண்ணிக்கையில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகளை பெறவில்லை. பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் 2ம் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
வாக்காளர்கள் வாக்குச்சீட்டில் இரண்டாவது விருப்பமாக தேர்வு செய்த எண்ணிக்கை நடக்க உள்ளது. 3ம், 4ம் இடம் பிடித்தவர்களுக்கு வாக்களித்தவர்கள் தேர்வு செய்த 2ம் விருப்பம் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்

அதாவது இப்போது முதல் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்த அனுர திசநாயக்க மற்றும் இரண்டாம் இடம் பிடித்த சஜித் பிரேமதாசாவுக்கு விழுந்த வாக்குகள் அப்படியே இருக்கும்.
இது போக ரணில் உள்ளிட்ட 3ம், 4ம் இடம் பிடித்தவர்களுக்கு வாக்களித்தவர்களில் யாரெல்லாம் இரண்டாவது விருப்பமாக அனுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசா தேர்வு செய்துள்ளனர் என்று பார்க்கப்படும். அனுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோரை இரண்டாவது தேர்வாக தேர்வு செய்தவர்கள் வாக்குகள் மட்டுமே 2வது எண்ணிக்கையில் கணக்கில் எடுக்கப்படும்.
ஏற்கனவே அனுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசா ஆகியோர் பெற்ற வாக்குகளோடு இந்த வாக்குகள் சேர்க்கப்படும். இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
அதாவது முதலிடம் பிடித்த அனுர திசநாயக்க மற்றும் இரண்டாம் இடம் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையில் மட்டுமே இப்போது போட்டி. இதனால் மற்ற வேட்பாளர்கள் நீக்கப்படுவார்கள். இந்த மற்ற நீக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களின் இரண்டாம் தேர்வு யார் என்று பார்க்கப்படும். அந்த இரண்டாம் தேர்வு வாக்குகளில் யாரெல்லாம் அனுர திசநாயக்க மற்றும் சஜித் பிரேமதாசா தேர்வு செய்துள்ளனர் என்று பார்க்கப்படும்.
இதில் இறுதி எண்ணிக்கையில் அதிக வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
வாக்கு எண்ணிக்கை விவரம்: இலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காட்சிகள் திடீரென மாற தொடங்கி உள்ளன. தொடக்கத்தில் 50%-க்கும் மேல் வாக்குகளைக் கொண்டிருந்த அநுர குமார திசாநாயக்க, தற்போது 39.44% வாக்குகளிலும் சஜித் பிரேமதாசா 33.88% வாக்குகளிலும் உள்ளனர். ரணில் விக்கிரமசிங்க 17.95% வாக்குகள் பெற்றுள்ளனர்
இலங்கை அதிபர் தேர்தலில் முன்னிலையில் உள்ளபோதும் வாக்கு சதவிகிதத்தில் அனுர குமார திசநாயக்க சரிய தொடங்கி உள்ளார். காலையில் 50 விழுக்காட்டிற்கு மேல் முன்னிலை பெற்றிருந்த நிலையில், 11 மணி நிலவரப்படி 42 விழுக்காடாக குறைந்தது. தற்போது 40% க்கும் கீழ் சென்றுள்ளது. 2ஆவது இடத்தில் உள்ள சஜித் பிரேமதாசவின் வாக்கு சதவீதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனால் அங்கே இரண்டாம் விருப்ப வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்க உள்ளன. இலங்கை தேர்தல் விதிப்படி, 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றவரே வெல்ல முடியும். இறுதிச் சுற்று வரை அவர் 50 சதவிகிதத்தை தொடவில்லை என்றால் Instant Run of Method நடக்கும். அதாவது இரண்டாவது முன்னுரிமை வாக்குகள் எண்ணப்படும். அதாவது 1 ஆப்ஷனாக வாக்காளர்கள் ஒருவரை தேர்வு செய்வார்கள். அதில் பெரும்பான்மை இல்லாத பட்சத்தில் இரண்டாவது ஆப்ஷனாக ஒருவரை தேர்வு செய்து இருப்பார்கள்.. அவர்களுக்கான வாக்குகள் எண்ணப்படும்.
இலங்கை தேர்தல் விதிப்படி ஒருவர் அதிபராக 50 சதவிகித வாக்குகளுக்கும் கூடுதலாக பெற வேண்டும். இதனால் அங்கே Instant Run of Method முறையில் வாக்குகளை எண்ண ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தேர்தல் அதிகாரிகள் இதற்காக தயாராகி வருகின்றனர். இதனால் தேர்தல் முடிவுகள் நாளை வரை கூட இழுக்கப்படலாம். நாளை வரை கூட வாக்குகள் தொடர்ந்து எண்ணப்படலாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications