காய்ச்சல் இருந்தாலும் தனி தேர்வு ஒதுக்கி தரப்படும்.. பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ரூல்ஸ்
சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் தனி அறை ஏற்பாடு செய்து தரப்படும் என்று, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அந்த மாணவர்கள் தேர்வு எழுதுவது, கடினம் என கருதினால், அந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு மீண்டும் வீட்டுக்கு அனுப்பப் படுவார்கள்.

மற்றொரு வழிகாட்டுதல்படி, மாணவர்களில் யாருக்காவது, உடல் வெப்பம் 99 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியிருந்தாலும், ஒருவேளை, அந்த மாணவர் தயார் என்றால், தேர்வு எழுத தனி அறையில் அமர வைக்க வேண்டும். அவருக்கு தனி கழிவறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று அந்த வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தேர்வு எழுதாமல், வீட்டுக்குச் செல்ல விரும்பினால், அந்த மாணவரை வீட்டுக்கு அனுப்பலாம். அவர் துணைத் தேர்வை எழுதிக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
காய்ச்சல் இருந்தாலும், விரும்பினால், மாணவர்களை தனி அறையில் அமர வைத்து தேர்வு நடத்த வேண்டும் என்பது முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது.
தேர்வு எழுதக்கூடிய மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தாலோ அல்லது கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டாலோ, மாணவர்களுக்கு என்ன வழி முறைகள் பின்பற்றப்படும் என்ற ஒரு சந்தேகம் இருந்தது. அதனை தெளிவுபடுத்தும் விதமாக இந்த வழிகாட்டு, நெறிமுறைகள் இருக்கின்றன.
வழிகாட்டு நெறிமுறைகள் இப்படி இருந்தாலும், காய்ச்சல் இருக்கும் மாணவர்களுக்கெல்லாம், தனி அறை, தனி கழிவறை சாத்தியமா என்ற கேள்வி பெற்றோர் மனதில் எழுந்துள்ளது.
ஜூன் 15 முதல், எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 2020 தொடங்க உள்ளது. தேர்வுக்கு வரும் அனைத்து மாணவர்களும் தேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன்பு வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும்.
-
அண்ணாமலை போட்டி இல்லை! கோவை வடக்கில் வானதி, மயிலாப்பூரில் தமிழிசை.. பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு -
தமிழ்நாடு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்.. யார் இவர்? வெங்கடராமனை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவு -
சூடுபிடிக்கும் தேர்தல் களத்தில்.. கொட்டி தீர்க்க போகுது மழை.. 2 நாட்களுக்கு குளுகுளு கிளைமேட் தான்! -
மத்திய அரசின் முடிவு.. கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது.. தமிழச்சி தங்கப்பாண்டியன் பதிவு -
"அண்ணாமலை ஆதரவாளரா?You are rejected!" புதிய பிரச்சார வாகனத்துடன்நொந்து போன அமர்பிரசாத் ரெட்டி ! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
ஏழை மாணவர்களுக்கு சூப்பர் சான்ஸ்.. தனியார் பள்ளிகளில் LKG முதல் இலவசம்.. ஹென்றி சொன்ன தேதியை பாருங்க -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம்











Click it and Unblock the Notifications