பொது வாழ்வில் பல உயரங்களைத் தொட்டவர் சுஷ்மா சுவராஜ்.. ஸ்டாலின் புகழாரம்
Recommended Video
சென்னை: ஒரு பெண்ணாக பொது வாழ்வில் பல உயரங்களைத் தொட்டவர் மறைந்த சுஷ்மா சுவராஜ் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு தமிழக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான திருமதி.சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் மரணமடைந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது.
ஒரு பெண்ணாக, பொதுவாழ்வில் பல உயரங்களை எட்டி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றி பெருமை சேர்த்தவர். அவரது மறைவினால் துயரத்தில் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்ன ஒரு கம்பீரம்.. மறக்க முடியாத சுஷ்மா!
சரத்குமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் விடுத்துள்ள செய்தியில் 7 முறை எம்பி, டெல்லியின் முதல் பெண் முதல்வர், 2வது பெண் வெளியுறவுத்துறை அமைச்சர், அரசியலில் சக்தி வாய்ந்த பெண் தலைவராக, எல்லாவற்றுக்கும் மேலாக சாமானிய மக்களால் எளிதில் அணுகப்படும் தலைவராக விளங்கியவர் சுஷ்மா சுவராஜ். அவரது மறைவுச் செய்தி என்னை வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.