கீழடி புனை மெய்யாக்க செயலியை துவக்கி வைத்த முதல்வர்! 200 தொல் பொருட்களை 3Dயில் பார்க்கலாம்!
சென்னை: கீழடி அருங்காட்சியக தொல்பொருட்களை 3Dயில் பார்க்கும் வகையில் கீழடி புனை மெய்யாக்க செயலி (Keeladi Augment Reality (AR) App ஐ முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கீழடி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் உலகில் எங்கிருந்தும் யாரும் காணும் வகையில் இந்தசெயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழடி அருங்காட்சியகத்திற்காக பிரத்தியேகமாக கீழடி Augment Reality (AR) செயலியை தமிழ்நாடு தொல்லியல் துறை உருவாக்கியுள்ளது. கீழடி அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்டுள்ள 200 தொல்பொருட்களை AR மற்றும் 3D முப்பரிமாணத்தில் பார்க்கலாம்.

3D மற்றும் AR வியூவருடன் கலைப்பொருட்கள் பற்றிய தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். பார்வையாளர்கள் தங்களின் கைபேசி வாயிலாகவே அகழாய்வுக் குழி மற்றும் தொல்பொருட்களைப் பார்வையிடும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.
கீழடியின் வரலாற்றைப் பற்றிய ஆழமான புரிதலை அருங்காட்சியகத்தின் ஒவ்வொரு கட்டங்களிலும் வைக்கப்பட்டுள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பெறலாம்.
கீழடி AR செயலி கீழடி பண்பாட்டுப் பெருமைகளை உலகளவில் பறைசாற்றும் வகையிலும், அனைவரையும் ஈர்க்கக்கூடியதாகவும், கல்வியறிவு பெறும் வகையிலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் அறிவியல் பகுப்பாய்வு முடிவுகள் வாயிலாக தமிழர்களின் வளமான பண்பாட்டு மரபுகள் நிரூபிக்கப்பட்டு வருகின்றன.
அகழாய்வுகள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்காகவும் கீழடி AR செயலி போன்ற தொழில்நுட்பங்களைத் தொடங்கி வைத்து இன்று மேற்கொள்ளப்படும் நல்ல பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications